நாட்டில் முதலீட்டை ஊக்குவிக்கவும், தொழில் துறையை மேம்படுத்தவும் பல புதிய அறிவிப்புகளையும் நிதி ஒதுக்கீடுகளையும் ஜனாதிபதி வெளியிட்டுள்ளார்.
முதலீட்டு வலயங்களுக்கான சேவை அபிவிருத்திக்காக 1000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும். காணி தகவல் உட்பட மத்திய டிஜிட்டல் கட்டமைப்புக்காக 100 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும்.
தொழிற்துறை அபிவிருத்திக்காக மேலும் 1000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும். சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முனைவோருக்குக் கடன் வழங்குவதற்காக 5900 மில்லியன் ரூபாய் ஒதுக்கிடப்படும்.
வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்காக வதிவிட விசா முறைமை (Residency Visa System) அறிமுகப்படுத்தப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
சர்வதேச வர்த்தக உடன்படிக்கைக்கு ஒப்பான புதிய முறைமை ஒன்று தயாரிக்கப்படவுள்ளது.

