Rauff Hakeem
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனாதிபதி நழுவல் போக்கினையே கடைப்பிடிக்கிறார் – ரவூப் ஹக்கீம் குற்றச்சாட்டு!

Share

மாகாண சபைத் தேர்தலைத் தொடர்ந்து பிற்போடுவதற்கான நழுவல் போக்கினையே ஜனாதிபதி முன்னெடுக்கிறார் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் குற்றச்சாட்டினார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (நவ 7) நடைபெற்ற 2026ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட உரை தொடர்பாக ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மாகாண சபைத் தேர்தல் பற்றி ஜனாதிபதி பல விடயங்களைக் குறிப்பிட்டார். மாகாண சபைத் தேர்தல் விடயத்தில் ஜனாதிபதி நழுவல் போக்கினையே கடைப்பிடிக்கிறார்.

மாகாண சபைத் தேர்தலை நடத்த அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு நாங்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம். தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.

2026ஆம் ஆண்டு வரவு – செலவுத் திட்டத்தில் மக்கள் எதிர்க் கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு எவ்வித தீர்வும் முன்வைக்கப்படவில்லை. கடந்த அரசாங்கம் முன்னெடுத்த நடவடிக்கைகளையே இந்த அரசாங்கம் கடைப்பிடிக்கிறது. பெரியதொரு மாற்றம் ஏதும் இல்லை.

Share
தொடர்புடையது
1722752828 dds
செய்திகள்இலங்கை

சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த இலங்கை பிரஜை இராமேஸ்வரத்தில் கைது: புழல் சிறையில் அடைப்பு!

யாழ்ப்பாணத்திலிருந்து கடல் மார்க்கமாகச் சட்டவிரோதமாகப் புறப்பட்டு, இந்தியக் கடற்கரையை அடைந்த இலங்கை பிரஜை ஒருவர், இராமேஸ்வரத்தில்...

2 nurse
இலங்கைசெய்திகள்

தாதியர் கல்லூரிகளில் ஆசிரியர் பற்றாக்குறை: 175 வெற்றிடங்களை நிரப்ப உடனடியாக ஆட்சேர்ப்பு – சுகாதார அமைச்சர் உத்தரவு!

நாட்டின் தாதியர் கல்லூரிகளில் (Nursing Colleges) தாதியர் ஆசிரியர்களின் பற்றாக்குறை காரணமாக, ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு...

MediaFile 3 1
செய்திகள்அரசியல்இலங்கை

போதைப்பொருள் உற்பத்தி வழக்கு: சம்பத் மனம்பேரிக்கு சொந்தமான பேருந்து, கார், கெப் வாகனம் பறிமுதல்!

தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள சம்பத் மனம்பேரிக்கு சொந்தமானதாகக் கூறப்படும் ஒரு...

1728539417 vimalveravamnsa 2
செய்திகள்அரசியல்இலங்கை

நவம்பர் 21 எதிர்ப்புப் பேரணி: தேசிய சுதந்திர முன்னணி பங்கேற்க மறுப்பு – விமல் வீரவங்ச அறிவிப்பு!

எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி எதிர்க்கட்சிகள் முன்னெடுக்கவுள்ள எதிர்ப்புப் பேரணியில் பங்கேற்கப் போவதில்லை என தேசிய...