பூநகரி பிரதேச சபையின் புதிய தவிசாளர் சிறீரஞ்சன் தனது கடமைகளை இன்றைய தினம் காலை பொறுப்பேற்றுக் கொண்டார்.
புதிய தவிசாளரை வரவேற்கும் நிகழ்வும் இன்றைய தினம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. புதிய தவிசாளரை செயலாளர் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் வரவேற்றனர் .
இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ,கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் வேழமாலிகிதன், பூநகரி பிரதேச சபையின் உறுப்பினர்கள், தமிழரசுக் கட்சியின் செயற்பாட்டாளர்கள் , எனப் பலரும் கலந்து கொண்டனர்.
#SrilankaNews