25 68f3476a27f6c
செய்திகள்உலகம்

பொதுஜன பெரமுன வேட்பாளர்களிடம் இருந்து பொலிஸ் அறிக்கை கட்டாயம்: நாமல் ராஜபக்ச

Share

எதிர்காலத் தேர்தல்களில் பொதுஜன பெரமுனவின் வேட்பாளர்களிடம் இருந்து பொலிஸ் அறிக்கை பெறப்படும் என்று கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

வேட்பாளர்கள் திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளனரா இல்லையா என்பதைக் கண்டறிவதற்காகவே இந்த நடைமுறை என அவர் விளக்கியுள்ளார்.

மேலும், விரைவில் மாகாண சபைத் தேர்தல்கள் நடைபெற இருப்பதால், அதற்கான வேட்புமனுக்களை எவ்வாறு சமர்ப்பிப்பது என்பது குறித்து ஒரு கட்சி என்ற முறையில் முடிவு எடுக்கப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்தார். கூட்டணிக் கட்சிகளுடன் கலந்துரையாடிய பின்னரே இது தொடர்பான இறுதி முடிவுகள் எடுக்கப்படும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

தேர்தல் திகதி இறுதி செய்யப்பட்ட பின்னரே தேர்தலில் போட்டியிடும் விதம் குறித்த அறிவிப்பை வெளியிடுவோம் என்றும், பொதுஜன பெரமுன ஒரு வலுவான அரசியல் கட்சியாக தன்னை முன்னிறுத்தும் என்றும் நாமல் ராஜபக்ச உறுதியளித்துள்ளார்.

Share
தொடர்புடையது
25 68f0b45097e66
செய்திகள்இந்தியாஉலகம்

இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எரிபொருள் கொள்வனவு செய்யாது: ட்ரம்ப் தகவல்

இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எரிபொருள் கொள்வனவு செய்யாது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும்...

image c348b91fcc
செய்திகள்இலங்கை

அடுத்த கல்வியாண்டு முதல் பாடப்புத்தகங்களுக்குப் பதிலாக சுய கற்றல் கையேடுகள்

அடுத்த கல்வியாண்டில் இருந்து, தரம் 1 மற்றும் தரம் 6 மாணவர்களுக்குப் பாடப்புத்தகங்கள் வழங்கப்படாது என்று...

Bangladesh Politics 1 1760710849824 1760710864579
உலகம்செய்திகள்

பங்களாதேஷில் இடைக்கால அரசாங்கத்தின் புதிய சாசனத்திற்கு எதிர்ப்பு: கண்ணீர்ப்புகை குண்டு வீச்சு

பங்களாதேஷில் முகமது யூனுஸ் தலைமையில் அமைக்கப்பட்ட இடைக்கால அரசாங்கம் நேற்று ஜூலை சாசனத்தில் கையெழுத்திட்டது. இதற்கு...

20d66a50 f8fa 11ef 8c03 7dfdbeeb2526.jpg
உலகம்

ட்ரம்பின் சமாதான யோசனை குறித்து செலென்ஸ்கி பதில்

யுக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறிய கருத்துடன் தான் உடன்படுவதாகத்...