image 87489e8d1f
செய்திகள்இலங்கைபிராந்தியம்

திருகோணமலை முத்து நகரில் 42 நாட்களான சிசு உயிரிழப்பு: பிரேதப் பரிசோதனைக்காக ஒப்படைப்பு – காவல்துறையினர் விசாரணை!

Share

திருகோணமலை முத்து நகர் பகுதியில் 42 நாட்களேயான சிசு ஒன்று உயிரிழந்தமை தொடர்பில் சீனக்குடா காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இந்தச் சம்பவம் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 11) அதிகாலையில் இடம்பெற்றுள்ளது.

இரவு குழந்தைக்குப் பால் கொடுத்துவிட்டுத் தாயார் படுக்கை அறையில் உறங்கிக் கொண்டிருந்த நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலை எழுந்து சிசுவைப் பார்த்தபோது அது உயிரிழந்த நிலையில் இருந்துள்ளது. இதுவே ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

இறந்த சிசுவைப் பரிசோதித்தபோது, அதன் பெற்றோர், சிசுவை ‘எக்கோ’ பரிசோதனைக்காக எதிர்வரும் 13ஆம் திகதி திருகோணமலை பொது வைத்தியசாலைக்குக் கொண்டு வருமாறு மருத்துவர்கள் முன்னர் தமக்குக் கூறியிருந்தாகக் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளனர்.

சிசுவின் ஜனாஸாவை நல்லடக்கம் செய்ய முற்பட்டபோது அதனை மீட்ட சீனக்குடா காவல்துறையினர், சிசுவின் உடலைத் திருகோணமலைப் பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணரின் அறிக்கைக்காக ஒப்படைத்துள்ளனர். சிசுவின் மரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகச் சீனக்குடா காவல்துறையினர் தெரிவித்தனர்.

Share
தொடர்புடையது
MediaFile 1 10
செய்திகள்அரசியல்இலங்கை

ஒன்றிணைந்த எதிர்க்கட்சி கூட்டத்தில் துப்பாக்கியுடன் காணப்பட்ட முன்னாள் எம்.பி: விசாரணைக்காகப் பறிமுதல்!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதித லொக்குபண்டாரவிடம் (Uditha Lokubandara) இருந்த ஒரு கைத்துப்பாக்கியை நுகேகொடப் பொலிஸ்...

parliament2
செய்திகள்அரசியல்இலங்கை

அனர்த்த நிலைமை குறித்துப் பேச: பாதிக்கப்பட்ட மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு!

நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமைகள் குறித்து விவாதிப்பதற்காக, அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த பாராளுமன்ற...

images 6 2
செய்திகள்இலங்கை

வாகன இறக்குமதி நிலையான மட்டத்தை அடைந்தது; டொலர் கையிருப்பு உயரும்: மத்திய வங்கி ஆளுநர் நம்பிக்கை!

இலங்கையில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வாகன இறக்குமதி குறிப்பிடத்தக்க அளவில் நிலையான மட்டத்தை அடைந்துள்ளதாக,...

1763816381 road 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மண்சரிவு அபாயம் காரணமாக கொழும்பு-கண்டி பிரதான வீதி மீண்டும் மூடப்படுகிறது!

கொழும்பு – கண்டி பிரதான வீதி இன்று (நவம்பர் 26) இரவு 10 மணி முதல்...