images 4 3
செய்திகள்இந்தியாஇலங்கை

இலங்கைக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்ததுடன், உடனடி உதவிகளை அறிவித்தார் பிரதமர் மோடி!

Share

தீவிரமான காலநிலை மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் “திட்வா” (DITWA) புயலின் காரணமாகத் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த இலங்கையர்களுக்கு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது ‘எக்ஸ்’ (X) சமூக வலைத்தளப் பக்கத்தில் பாதிக்கப்பட்ட அனைத்துக் குடும்பங்களின் பாதுகாப்பு, ஆறுதல் மற்றும் விரைவான இயல்பு நிலைக்காகப் பிரார்த்திப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் மிக நெருங்கிய கடல்சார் அண்டை நாடான இலங்கைக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக, இந்தியா உடனடியாக “சாகர் பந்து (Sagar Bandhu)” நடவடிக்கையின் கீழ் அவசர நிவாரணப் பொருட்களையும், அத்தியாவசிய மனிதாபிமான உதவி மற்றும் அனர்த்த நிவாரண ஆதரவையும் அனுப்பி வைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிலைமைக்கு ஏற்ப மேலும் உதவிகளையும், ஆதரவையும் வழங்க இந்தியா தயாராக உள்ளது என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

இந்தியாவின் “அண்டை நாடுகளுக்கே முதலிடம்” (Neighbourhood First) என்ற கொள்கை மற்றும் “விஷன் மகாசாகர்” (Vision Sagar) வழிகாட்டுதலின்படி, இலங்கையின் தேவைப்படும் நேரத்தில் இந்தியா உறுதியுடன் துணை நிற்கிறது என்றும் பிரதமர் நரேந்திர மோடி தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.

Share
தொடர்புடையது
13 4
செய்திகள்இந்தியா

கர்நாடகாவில் 16 வயதுக்குட்பட்டோருக்கு சமூக ஊடகத் தடை: முதலமைச்சர் சித்தராமையா அறிவிப்பு

கர்நாடகாவில் 16 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது....

wo
செய்திகள்உலகம்

ஈரானின் நிலத்தடி ஏவுகணைத் தளங்கள்: போர்க்களத்தில் பலவீனமான புள்ளிகளாக மாறினவா?

ஈரான் தனது ஏவுகணைப் படைகளைப் பாதுகாப்பதற்காகப் பல ஆண்டுகளாக மலைகளுக்கு அடியில் அமைத்திருந்த பிரம்மாண்டமான ‘ஏவுகணை...

12 5
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் படகு கவிழ்ந்து விபத்து: இருவர் உயிரிழப்பு, தேடுதல் பணிகள் தீவிரம்!

யாழ்ப்பாணம், குருநகர் இறங்குதுறையில் இன்று (06.03.2026) காலை பயணிகளை ஏற்றிச் சென்ற படகு ஒன்று கவிழ்ந்து...

14 5
செய்திகள்உலகம்

இந்தோனேசியாவிலும் 16 வயதிற்குட்பட்டோருக்கு சமூக ஊடகத் தடை: மார்ச் 28 முதல் அமுல்!

இந்தோனேசியாவில் 16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு அந்நாட்டு அரசாங்கம் அதிரடித் தடை விதித்துள்ளது....