Appropriation Bill 2025 Submitted in Parliament by Harini Amarsuriya
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாட்டு மக்கள் விரும்பினால் இப்போதே வீடு செல்லத் தயார்: நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்து பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆவேச உரை!

Share

தமக்கு எதிராக எதிர்க்கட்சியினர் கொண்டுவரத் திட்டமிட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்துப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பாராளுமன்றத்தில் நேற்று (23) காரசாரமான பதிலடியைக் கொடுத்துள்ளார்.

“எனக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவர வேண்டிய அவசியமில்லை. பிரதமர் பதவியில் மாற்றம் வேண்டும் என நாட்டு மக்கள் தீர்மானித்தால், நான் இப்போதே வீட்டிற்குச் செல்லத் தயாராக இருக்கிறேன். நான் கட்டுப்படுவது நாட்டு மக்களுக்கும் எனது மனசாட்சிக்கும் மட்டுமே” எனப் பிரதமர் சபையில் தெரிவித்தார்.

ஜனாதிபதியை வீட்டுக்கு அனுப்புவதாகக் கூறி தோல்வியடைந்த எதிர்க்கட்சியினர், இப்போது பிரதமரை வீட்டுக்கு அனுப்பும் ‘பகல் கனவு’ காண்கிறார்கள். அது ஒருபோதும் பலிக்காது என அவர் குறிப்பிட்டார்.

பல்கலைக்கழகங்கள் (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றிய அவர்,இச்சட்டம் பல்கலைக்கழக கட்டமைப்பை அரசியல்மயமாக்கும் என்ற எதிர்க்கட்சியினரின் குற்றச்சாட்டை அவர் மறுத்தார். 1978-ஆம் ஆண்டு சட்டத்தில் உள்ள நடைமுறைச் சிக்கல்களைத் தீர்க்கவே இந்தத் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளதாக விளக்கமளித்தார்.

தரம் 6 முதல் 13 வரை மாணவர்களுக்கு நடைமுறைக்குச் சாத்தியமான, சர்வதேச சவால்களை எதிர்கொள்ளக்கூடிய கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்துவதே அரசாங்கத்தின் இலக்கு.

தரம் 6 பாடப்புத்தகத்தில் ஏற்பட்ட தவறை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளதுடன், அதனைத் திருத்துவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. இதனை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டார்.

கடந்த சில வாரங்களாகத் தரம் 6 ஆங்கிலப் பாடப்புத்தகம் மற்றும் கல்வி மறுசீரமைப்புத் திட்டங்களுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வந்தனர். இந்நிலையில், பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவரப் போவதாக எதிர்க்கட்சி அறிவித்திருந்தது. அதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே நேற்றைய விவாதம் அமைந்திருந்தது.

 

 

Share
தொடர்புடையது
MediaFile 6 3
பிராந்தியம்இலங்கைசெய்திகள்

கல்முனையில் அதிர்ச்சி: 15 வயது பணிப்பெண் பாலியல் துஷ்பிரயோகம் – சந்தேகநபர் கைது!

கல்முனை தலைமையகப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில், வீட்டில் பணிப்பெண்ணாக வேலை செய்த 15 வயதுச்...

image 870x 6965aedee783e
செய்திகள்இலங்கை

பல மாகாணங்களில் மழை: சில இடங்களில் 50 மி.மீ பலத்த மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை!

நாட்டின் பல பகுதிகளில் மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் நிலவுவதாக வளிமண்டலவியல்...

MediaFile 7 4
செய்திகள்உலகம்

உலகப் பொருளாதாரத்தில் புதிய வரலாறு: 5,000 டொலர்களைக் கடந்தது தங்கம்! வெள்ளி மற்றும் பெலேடியமும் அதிரடி உயர்வு!

உலக சந்தையில் தங்கத்தின் விலை வரலாற்றில் முதல் முறையாக 5,000 அமெரிக்க டொலர் என்ற பிரம்மாண்டமான...

MediaFile 5 4
உலகம்செய்திகள்

அமெரிக்காவை உறைய வைத்த ஃபெர்ன் பனிப்புயல்: 12 பேர் உயிரிழப்பு; 13,000 விமானங்கள் ரத்து; அவசரநிலை பிரகடனம்!

அமெரிக்க வரலாற்றில் மிக மோசமான குளிர்காலப் புயல்களில் ஒன்றாகக் கருதப்படும் “ஃபெர்ன்” (Winter Storm Fern)...