25 6909692213679
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணம்: ஐஸ் போதைப்பொருள் மற்றும் வழிப்பறி கொள்ளை – தேடப்பட்டவர் உட்பட 6 பேர் கைது!

Share

யாழ்ப்பாணத்தில் (Jaffna) வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த நபர் உட்பட மொத்தமாக ஆறு பேர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணக் காவல்துறையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், ஐஸ் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் இந்த ஆறு பேரையும் கைது செய்து, காவல் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.

விசாரணையின் போது, குறித்த ஆறு பேரில் ஒருவர் யாழ்ப்பாண நகர் பகுதியில் இடம்பெற்ற வழிப்பறிக் கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடையவர் என்பதனைக் காவல்துறையினர் கண்டறிந்தனர்.

அவரிடம் முன்னெடுத்த மேலதிக விசாரணைகளின் போது, கொள்ளையடிக்கப்பட்ட சங்கிலி மற்றும் கொள்ளைக்குப் பயன்படுத்தப்பட்ட இரண்டு மோட்டார் சைக்கிள்கள் என்பவற்றை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள ஆறு பேரையும் காவல் நிலையத்தில் தடுத்து வைத்துத் தொடர் விசாரணைகளை காவல்துறையினர் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

Share
தொடர்புடையது
23 64b883bc2cf55
செய்திகள்இலங்கை

வடமேல் மாகாண மக்களுக்கு மகிழ்ச்சிச் செய்தி: ஒரு நாளில் தேசிய அடையாள அட்டை சேவை குருணாகலில் ஆரம்பம்!

வடமேல் மாகாண மக்களின் வசதி கருதி, தேசிய அடையாள அட்டையை ஒரு நாளில் வழங்கும் சேவை...

mcms
உலகம்செய்திகள்

வீரப்பன் தேடுதல் வேட்டை: பாதிக்கப்பட்ட மக்களுக்கு ₹ 2.59 கோடி இழப்பீடு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது அதிரடிப் படையால் (Special Task Force – STF) பாதிக்கப்பட்ட...

21097036 truck
செய்திகள்உலகம்

அமெரிக்காவில் கட்டாய ஆங்கிலத் தேர்வில் தோல்வி: 7,000க்கும் மேற்பட்ட பாரவூர்தி சாரதிகள் பணி நீக்கம்!

அமெரிக்காவில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பாரவூர்தி சாரதிகளைப் பாதிக்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, இந்த ஆண்டு...

539661 trisha mks
செய்திகள்இந்தியா

திரிஷா, விஷால், மணிரத்னம் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: டி.ஜி.பி. அலுவலகத்திற்கு மின்னஞ்சல் – புரளி என உறுதி!

நாடு முழுவதும் அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் மற்றும் முக்கிய நிறுவனங்களுக்குச் சமூக ஊடகங்கள் மூலம்...