chambikka
செய்திகள்அரசியல்இலங்கை

யூதர்களை இலக்கு வைத்து இலங்கையிலும் தாக்குதல் நடக்க வாய்ப்பு – பாட்டாலி சம்பிக ரணவக்க எச்சரிக்கை!

Share

அவுஸ்திரேலியாவில் யூதர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலைப் போன்ற சம்பவங்கள் இலங்கையிலும் இடம்பெறக்கூடும் என முன்னாள் அமைச்சர் பாட்டாலி சம்பிக ரணவக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கை தற்போது இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளைக் கவரும் ஒரு முக்கிய இடமாக மாறியுள்ள நிலையில், அவர்களின் வருகை முன்னெப்போதையும் விடக் கணிசமாக அதிகரித்துள்ளது. இந்தச் சூழலைச் சுட்டிக்காட்டிய அவர், சர்வதேச ரீதியாக நிலவும் பதற்றங்கள் இலங்கையிலும் எதிரொலிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவித்தார்.

இலங்கை முஸ்லிம் சமூகம் தற்போதைய பூகோள அரசியல் (Global Politics) மாற்றங்கள் மற்றும் அதன் விளைவுகள் குறித்து மிகவும் தெளிவாக இருக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

இலங்கையில் இஸ்லாத்தையோ அல்லது குரானையோ தடை செய்யப்போவதில்லை என்றும், அவ்வாறு செய்ய முடியாது என்றும் தெரிவித்த அவர், பாதுகாப்புக் காரணங்களுக்காக விழிப்புணர்வு அவசியம் என்பதை வலியுறுத்தினார்.

பூகோள அரசியலின் சிக்கல்களைச் சரியாகப் புரிந்துகொண்டு, நாட்டில் மீண்டும் ஒரு அசம்பாவிதம் ஏற்படாதவாறு தற்காப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

 

Share
தொடர்புடையது
4670422 455699102
செய்திகள்உலகம்

கிறிஸ்துமஸ் தின போர் நிறுத்தத்தை ரஷ்யா நிராகரித்தது வேதனையளிக்கிறது – பாப்பரசர் 14-வது லியோ கவலை!

உலகம் முழுவதும் நாளை (25) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், பாப்பரசர் 14-வது லியோ விடுத்த...

images 10 3
செய்திகள்உலகம்

தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவு!

தாய்வானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம்...

images 9 3
அரசியல்இலங்கைசெய்திகள்

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கி வெடித்ததில் கான்ஸ்டபிள் காயம்!

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் இன்று (24) மாலை நிகழ்ந்த எதிர்பாராத துப்பாக்கிச் சூட்டு விபத்தில் பொலிஸ்...

images 9 3
செய்திகள்இலங்கை

நீர்நிலைகளில் இறங்கும்போது எச்சரிக்கை: பண்டிகைக் காலத்தில் பொதுமக்களுக்கு வைத்திய நிபுணர் விடுத்த அவசர வேண்டுகோள்!

தற்போது நிலவும் அனர்த்தச் சூழல் மற்றும் பண்டிகைக் காலத்தைக் கருத்திற் கொண்டு, நீர்நிலைகளைப் பயன்படுத்தும் போது...