இந்தியாசெய்திகள்

பரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் விஜயின் மனதை பாதித்த சிறுவன் ராகுல் யார்?

13 30
Share

பரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் விஜயின் மனதை பாதித்த சிறுவன் ராகுல் யார்?

பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மக்களையும், விவசாயிகளையும் சந்தித்த தமிழக வெற்றி கழக தலைவர் விஜய், ராகுல் என்ற சிறுவனை பற்றி பேசியுள்ளார்.

பரந்தூர் விமான நிலைய போராட்டக் குழுவை தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் சந்திப்பதற்கு அனுமதி அளித்த காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது.

இந்நிலையில், கிராம மக்களையும் போராட்ட குழுவினரையும் சந்தித்து ஆதரவு தெரிவித்த விஜய் பேசுகையில், “உங்களுடைய போராட்டத்தை பற்றி ராகுல் என்ற சிறுவன் பேசியதை கேட்டு நான் இங்கு வந்துள்ளேன்.

கிட்டத்தட்ட 910 நாட்களுக்கு மேலாக நடக்கும் போராட்டம் குறித்து சிறுவன் பேசியதை கேட்டவுடன் ஏதோ செய்தது. இந்த விடயத்தில் என்னுடைய முழு ஆதரவு உங்களுக்கு உண்டு.

நாட்டிற்கு முக்கியமான உங்களை போன்ற விவசாயிகளை காலடி மண்ணை தொட்டு தான் என் பயணத்தை தொடங்குகிறேன்” என்றார்.

இதில், விஜய் குறிப்பிட்ட ராகுல் என்ற சிறுவன் பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பேட்டி அளித்துள்ளார்.

அந்த சிறுவன் அளித்த பேட்டியில், “எங்களுக்கு விமான நிலையம் வேண்டாம். விவசாய நிலம், ஏரிகள், பள்ளிகள் மட்டுமே போதும். விமான நிலையம் வந்தால் நாங்கள் என்ன மேலேயே பறக்க போகிறோம்.

விமான நிலையம் வந்தால் பள்ளி பாதிக்கப்படுகிறது. அவங்க பசங்க மட்டும் படிக்கனுன்னு நினைக்கிறாங்க. நாங்கள் படிக்க வேண்டாமா? ஏரி இருந்தால் தான் வெயில் காலத்தில் நாங்க இங்க வந்து குளிப்போம்” என்று பேசினார்.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...