வடமராட்சி கிழக்கு, குடத்தனை வடக்கில் ‘விதைகள் உறங்குவதில்லை’ திட்டத்தின் கீழ் பனை விதை நடுகை ஆரம்பம்!

25 69181b7d5dd1e

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு குடத்தனை வடக்கு கிராமத்தில் பனை விதை நடுகைத் திட்டம் இன்று (நவ 15) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டம் ‘விதைகள் உறங்குவதில்லை’ எனும் தொனிப்பொருளின் கீழ் முன்னெடுக்கப்படுகிறது. புளுஸ் அறக்கட்டளை மற்றும் புளூஸ் விளையாட்டு கழகத்தினரின் நிதி அனுசரணையுடன் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் ஜனநாயகப் போராளிகள் கட்சித் தலைவர் சி. வேந்தன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார்.

வடமராட்சி கிழக்கு சமூக ஆர்வலர்களான அ. ரெஜி, விமலவன் மற்றும் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு பனை விதைகளை நட்டனர்.

Exit mobile version