19 2
இந்தியாசெய்திகள்

ஐபிஎல் போட்டிகளில் தமக்கு அனுமதியில்லை: கவலை வெளியிட்டுள்ள பாகிஸ்தானின் முன்னாள் வீரர்

Share

ஐபிஎல் போட்டிகளில் தமக்கு அனுமதியில்லை: கவலை வெளியிட்டுள்ள பாகிஸ்தானின் முன்னாள் வீரர்

ஐபிஎல் தொடரில் பாகிஸ்தானியர்களுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவர் வாசிம் அக்ரம்(Wasim Akram) கவலை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பான காணொளி தற்போது சமூக வலை தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

2008 முதல் ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் சில ஐபிஎல் தொடர்களில் பாகிஸ்தான் வீரர்களுக்கும் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டு வந்தது.

எனினும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அரசாங்கங்களுக்கு இடையேயான உறவு மோசமானதை அடுத்து பாகிஸ்தான் வீரர்களுக்கு ஐபிஎல் தொடரில் பங்கேற்க அனுமதி வழங்கப்படவில்லை.

இது நேரடியாக விதிக்கப்பட்ட தடை அல்ல என்றாலும், இந்த மறைமுகத் தடை இன்று வரை நீடிக்கிறது. இதனை விட பாகிஸ்தான் வீரர்கள் ஐபிஎல் தொடரில் பங்கேற்க விருப்பம் தெரிவித்து, ஏலத்தில் பங்கேற்க விண்ணப்பம் அளித்தாலும் எந்த அணியும் அவர்களை வாங்க முன்வரவில்லை.

இந்தநிலையில், சில ஆண்டுகளுக்கு முன் வரை முன்னாள் பாகிஸ்தான் வீரர்களும், தற்போதைய வர்ணனையாளர்களாக இருக்கும் வாசிம் அக்ரம் மற்றும் ரமீஸ் ராஜா போன்றோரும் ஐபிஎல் தொடரில் வர்ணனையாளர்களாக செயல்பட்டு வந்தனர்.

வாசிம் அக்ரம் ஆரம்பத்தில், சில ஆண்டுகள் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின்பந்துவீச்சு ஆலோசகராகவும் செயல்பட்டு வந்தார்.

பின்னர் அவர்களுக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதற்கு மத்தியில் அண்மையில் பாகிஸ்தான் மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் பங்கேற்ற, சர்வதேச ஒருநாள் போட்டியின் வர்ணனையின் போது அவுஸ்திரேலிய வர்ணனையாளர் ஐபிஎல் தொடரை பற்றி பேசினார்.

அப்போது அருகே இருந்த வாசிம் அக்ரம், தாம், ஐபிஎல் தொடரில் இருந்து நீண்ட தூரம் விலகி வந்து விட்டதாக கூறினார். இதன்போது வர்ணனையாளர் மார்க் ஹோவர்ட் ஏன் என்ற கேள்வியை எழுப்பியபோது,எங்களுக்கு ஐபிஎல் தொடரில் அனுமதி இல்லை என்று வாசிம் அக்ரம் தெரிவித்தார்.

அவரது இந்த கருத்து தற்போது சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

இதேவேளை இந்திய அணி அடுத்த ஆண்டு நடைபெற உள்ள 2025 செம்பியன்ஸ் கிரிக்கெட் தொடரில் பங்கேற்க பாகிஸ்தான் செல்லுமா என்ற சந்தேகம் தொடர்ந்தும் நிலவி வருகிறது.

Share

Recent Posts

தொடர்புடையது
MediaFile 4 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இன்று மகா சிவராத்திரி! – சிவாலயங்களில் குவியும் பக்தர்கள்; இரவு முழுவதும் விழித்திருந்து வழிபாடு!

ஆன்மீக ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் மிக முக்கியமான தினமாகக் கருதப்படும் மகா சிவராத்திரி விரதம் இன்று...

MediaFile 4 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அக்குரேகொட படுகொலை: கொலையாளிகளின் கார் மீட்பு! – சட்டத்தரணியின் ‘தரப்பு மாற்றம்’ மரணத்திற்கு காரணமா?

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவியைப் படுகொலை செய்யப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் கார், காலி...

image 1d03fce287
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உங்கள் கையெழுத்து உங்கள் உரிமையைக் காக்கும்’: PTA-வை நீக்கக் கோரி வடகிழக்கில் ஒரு லட்சம் கையெழுத்துப் போராட்டம்!

சர்ச்சைக்குரிய பயங்கரவாதத் தடைச்சட்டம் (PTA) மற்றும் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட முன்மொழிவுகளை (ATA) முற்றாக...

image 914163dc5e
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பு ஜிந்துபிட்டியில் பயங்கரம்: சிகையலங்கார நிலையத்திற்குள் புகுந்து துப்பாக்கிச் சூடு! 

கொழும்பு, ஜிந்துபிட்டி வரக்கா சந்தி பகுதியிலுள்ள முடியலங்கார நிலையம் (Barber Shop) ஒன்றிற்குள் நேற்றிரவு (14)...