19 2
இந்தியாசெய்திகள்

ஐபிஎல் போட்டிகளில் தமக்கு அனுமதியில்லை: கவலை வெளியிட்டுள்ள பாகிஸ்தானின் முன்னாள் வீரர்

Share

ஐபிஎல் போட்டிகளில் தமக்கு அனுமதியில்லை: கவலை வெளியிட்டுள்ள பாகிஸ்தானின் முன்னாள் வீரர்

ஐபிஎல் தொடரில் பாகிஸ்தானியர்களுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவர் வாசிம் அக்ரம்(Wasim Akram) கவலை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பான காணொளி தற்போது சமூக வலை தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

2008 முதல் ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் சில ஐபிஎல் தொடர்களில் பாகிஸ்தான் வீரர்களுக்கும் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டு வந்தது.

எனினும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அரசாங்கங்களுக்கு இடையேயான உறவு மோசமானதை அடுத்து பாகிஸ்தான் வீரர்களுக்கு ஐபிஎல் தொடரில் பங்கேற்க அனுமதி வழங்கப்படவில்லை.

இது நேரடியாக விதிக்கப்பட்ட தடை அல்ல என்றாலும், இந்த மறைமுகத் தடை இன்று வரை நீடிக்கிறது. இதனை விட பாகிஸ்தான் வீரர்கள் ஐபிஎல் தொடரில் பங்கேற்க விருப்பம் தெரிவித்து, ஏலத்தில் பங்கேற்க விண்ணப்பம் அளித்தாலும் எந்த அணியும் அவர்களை வாங்க முன்வரவில்லை.

இந்தநிலையில், சில ஆண்டுகளுக்கு முன் வரை முன்னாள் பாகிஸ்தான் வீரர்களும், தற்போதைய வர்ணனையாளர்களாக இருக்கும் வாசிம் அக்ரம் மற்றும் ரமீஸ் ராஜா போன்றோரும் ஐபிஎல் தொடரில் வர்ணனையாளர்களாக செயல்பட்டு வந்தனர்.

வாசிம் அக்ரம் ஆரம்பத்தில், சில ஆண்டுகள் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின்பந்துவீச்சு ஆலோசகராகவும் செயல்பட்டு வந்தார்.

பின்னர் அவர்களுக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதற்கு மத்தியில் அண்மையில் பாகிஸ்தான் மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் பங்கேற்ற, சர்வதேச ஒருநாள் போட்டியின் வர்ணனையின் போது அவுஸ்திரேலிய வர்ணனையாளர் ஐபிஎல் தொடரை பற்றி பேசினார்.

அப்போது அருகே இருந்த வாசிம் அக்ரம், தாம், ஐபிஎல் தொடரில் இருந்து நீண்ட தூரம் விலகி வந்து விட்டதாக கூறினார். இதன்போது வர்ணனையாளர் மார்க் ஹோவர்ட் ஏன் என்ற கேள்வியை எழுப்பியபோது,எங்களுக்கு ஐபிஎல் தொடரில் அனுமதி இல்லை என்று வாசிம் அக்ரம் தெரிவித்தார்.

அவரது இந்த கருத்து தற்போது சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

இதேவேளை இந்திய அணி அடுத்த ஆண்டு நடைபெற உள்ள 2025 செம்பியன்ஸ் கிரிக்கெட் தொடரில் பங்கேற்க பாகிஸ்தான் செல்லுமா என்ற சந்தேகம் தொடர்ந்தும் நிலவி வருகிறது.

Share
தொடர்புடையது
26 6990101d03ddb
செய்திகள்அரசியல்இலங்கை

அரகலய நிதிப் பின்னணி: ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை கோரும் நாமல் ராஜபக்ஷ!

இலங்கையில் 2022-ஆம் ஆண்டு இடம்பெற்ற ‘அரகலய’ போராட்டம் தொடர்பாகவும், அதற்கு வெளிநாடுகளில் இருந்து கிடைத்ததாகக் கூறப்படும்...

dailythanthi 2026 02 14 giawqio6 pul
செய்திகள்இந்தியா

புல்வாமா வீரர்களுக்கு 7-ம் ஆண்டு வீரவணக்கம்: நாடு முழுவதும் கருப்பு தினம் அனுசரிப்பு!

கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் திகதி, ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் சென்ற...

1763708534 drug 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

போதைப்பொருள் கும்பலுக்கு மரண அடி! – ஒரே நாளில் 820 பேர் கைது.

இலங்கை அரசாங்கம் மற்றும் காவல்துறை இணைந்து முன்னெடுத்து வரும் ‘நேஷன் யுனைடெட் – நேஷனல் டிரைவ்’...

images 14
செய்திகள்அரசியல்இலங்கை

நுரைச்சோலையில் பாரிய நிலக்கரி ஊழல்? – 5 கப்பல்களும் தரமற்றவை என சஜித் பிரேமதாச அதிரடி குற்றச்சாட்டு!

நுரைச்சோலையில் அமைந்துள்ள லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்காக அண்மையில் இறக்குமதி செய்யப்பட்ட ஐந்து நிலக்கரி...