19 2
இந்தியாசெய்திகள்

ஐபிஎல் போட்டிகளில் தமக்கு அனுமதியில்லை: கவலை வெளியிட்டுள்ள பாகிஸ்தானின் முன்னாள் வீரர்

Share

ஐபிஎல் போட்டிகளில் தமக்கு அனுமதியில்லை: கவலை வெளியிட்டுள்ள பாகிஸ்தானின் முன்னாள் வீரர்

ஐபிஎல் தொடரில் பாகிஸ்தானியர்களுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவர் வாசிம் அக்ரம்(Wasim Akram) கவலை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பான காணொளி தற்போது சமூக வலை தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

2008 முதல் ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் சில ஐபிஎல் தொடர்களில் பாகிஸ்தான் வீரர்களுக்கும் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டு வந்தது.

எனினும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அரசாங்கங்களுக்கு இடையேயான உறவு மோசமானதை அடுத்து பாகிஸ்தான் வீரர்களுக்கு ஐபிஎல் தொடரில் பங்கேற்க அனுமதி வழங்கப்படவில்லை.

இது நேரடியாக விதிக்கப்பட்ட தடை அல்ல என்றாலும், இந்த மறைமுகத் தடை இன்று வரை நீடிக்கிறது. இதனை விட பாகிஸ்தான் வீரர்கள் ஐபிஎல் தொடரில் பங்கேற்க விருப்பம் தெரிவித்து, ஏலத்தில் பங்கேற்க விண்ணப்பம் அளித்தாலும் எந்த அணியும் அவர்களை வாங்க முன்வரவில்லை.

இந்தநிலையில், சில ஆண்டுகளுக்கு முன் வரை முன்னாள் பாகிஸ்தான் வீரர்களும், தற்போதைய வர்ணனையாளர்களாக இருக்கும் வாசிம் அக்ரம் மற்றும் ரமீஸ் ராஜா போன்றோரும் ஐபிஎல் தொடரில் வர்ணனையாளர்களாக செயல்பட்டு வந்தனர்.

வாசிம் அக்ரம் ஆரம்பத்தில், சில ஆண்டுகள் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின்பந்துவீச்சு ஆலோசகராகவும் செயல்பட்டு வந்தார்.

பின்னர் அவர்களுக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதற்கு மத்தியில் அண்மையில் பாகிஸ்தான் மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் பங்கேற்ற, சர்வதேச ஒருநாள் போட்டியின் வர்ணனையின் போது அவுஸ்திரேலிய வர்ணனையாளர் ஐபிஎல் தொடரை பற்றி பேசினார்.

அப்போது அருகே இருந்த வாசிம் அக்ரம், தாம், ஐபிஎல் தொடரில் இருந்து நீண்ட தூரம் விலகி வந்து விட்டதாக கூறினார். இதன்போது வர்ணனையாளர் மார்க் ஹோவர்ட் ஏன் என்ற கேள்வியை எழுப்பியபோது,எங்களுக்கு ஐபிஎல் தொடரில் அனுமதி இல்லை என்று வாசிம் அக்ரம் தெரிவித்தார்.

அவரது இந்த கருத்து தற்போது சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

இதேவேளை இந்திய அணி அடுத்த ஆண்டு நடைபெற உள்ள 2025 செம்பியன்ஸ் கிரிக்கெட் தொடரில் பங்கேற்க பாகிஸ்தான் செல்லுமா என்ற சந்தேகம் தொடர்ந்தும் நிலவி வருகிறது.

Share
தொடர்புடையது
1722752828 dds
செய்திகள்இலங்கை

சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த இலங்கை பிரஜை இராமேஸ்வரத்தில் கைது: புழல் சிறையில் அடைப்பு!

யாழ்ப்பாணத்திலிருந்து கடல் மார்க்கமாகச் சட்டவிரோதமாகப் புறப்பட்டு, இந்தியக் கடற்கரையை அடைந்த இலங்கை பிரஜை ஒருவர், இராமேஸ்வரத்தில்...

2 nurse
இலங்கைசெய்திகள்

தாதியர் கல்லூரிகளில் ஆசிரியர் பற்றாக்குறை: 175 வெற்றிடங்களை நிரப்ப உடனடியாக ஆட்சேர்ப்பு – சுகாதார அமைச்சர் உத்தரவு!

நாட்டின் தாதியர் கல்லூரிகளில் (Nursing Colleges) தாதியர் ஆசிரியர்களின் பற்றாக்குறை காரணமாக, ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு...

MediaFile 3 1
செய்திகள்அரசியல்இலங்கை

போதைப்பொருள் உற்பத்தி வழக்கு: சம்பத் மனம்பேரிக்கு சொந்தமான பேருந்து, கார், கெப் வாகனம் பறிமுதல்!

தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள சம்பத் மனம்பேரிக்கு சொந்தமானதாகக் கூறப்படும் ஒரு...

1728539417 vimalveravamnsa 2
செய்திகள்அரசியல்இலங்கை

நவம்பர் 21 எதிர்ப்புப் பேரணி: தேசிய சுதந்திர முன்னணி பங்கேற்க மறுப்பு – விமல் வீரவங்ச அறிவிப்பு!

எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி எதிர்க்கட்சிகள் முன்னெடுக்கவுள்ள எதிர்ப்புப் பேரணியில் பங்கேற்கப் போவதில்லை என தேசிய...