01 16
செய்திகள்உலகம்

காபூல் மருத்துவமனை மீது பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்: 400 பேர் உயிரிழப்பு என தலிபான் அறிவிப்பு

Share

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மருத்துவமனை ஒன்றின் மீது பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலில் 400 பேர் உயிரிழந்துள்ளதாகவும், சுமார் 250 பேர் காயமடைந்துள்ளதாகவும் தலிபான் அரசாங்கம் அதிரடித் தகவலை வெளியிட்டுள்ளது. நேற்று திங்கட்கிழமை இரவு இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஆப்கானிஸ்தான் அரசின் துணை செய்தித் தொடர்பாளர் ஹம்துல்லா ஃபித்ரத் உறுதிப்படுத்தியுள்ளார்.

தாக்குதலுக்குள்ளான குறித்த மருத்துவமனையில் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததாக ஆப்கானிஸ்தான் சுகாதாரத் துறையின் செய்தித் தொடர்பாளர் ஷராபத் ஸமான் தெரிவித்துள்ளார். இத்தாக்குதலால் மருத்துவமனை கட்டடம் பாரியளவில் சேதமடைந்துள்ளதுடன், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்கும் பணிகளிலும், தீயை அணைக்கும் பணிகளிலும் மீட்புக்குழுவினர் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதேவேளை, மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளைத் தாம் இலக்கு வைக்கவில்லை என பாகிஸ்தான் இந்தத் தகவலை மறுத்துள்ளது. இருப்பினும், காபூல் மற்றும் ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதிகளில் தங்கள் தரப்பால் வான்வழித் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டதை பாகிஸ்தான் ஒப்புக்கொண்டுள்ளது. பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகவே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகப் பாகிஸ்தான் தரப்பு வாதிடுகின்றது.

இந்தச் சம்பவமானது ஏற்கனவே பதற்றமாக உள்ள ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் எல்லை உறவுகளில் மேலும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது. ஒரு மருத்துவமனையை இலக்கு வைத்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் சர்வதேச மனிதநேயச் சட்டங்களை மீறுவதாக தலிபான் அரசு குற்றம் சுமத்தியுள்ளது. இத்தாக்குதல் குறித்த மேலதிக விபரங்கள் மற்றும் சர்வதேச நாடுகளின் எதிர்வினைகள் வரும் நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
05 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தனியார் பஸ் சேவைகளை முறைப்படுத்தக் கோரிக்கை: அத்தியாவசியமற்ற நேரங்களில் சேவைகளைக் குறைக்கத் திட்டம்

நாட்டில் நிலவும் சூழலைக் கருத்திற்கொண்டு, தனியார் பஸ்களின் பயண நேரங்களை முறைப்படுத்துமாறும், பயணிகள் வருகை குறைவாக...

02 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிசக்தி சேமிப்பு நடவடிக்கை: ஒவ்வொரு புதன்கிழமையும் பொது விடுமுறையாக அறிவிப்பு

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியைக் கருத்தில் கொண்டு,...

21 13
செய்திகள்இலங்கை

எரிபொருள் QR குறியீட்டிற்கான போலி இணையதளங்கள் குறித்து எச்சரிக்கை

அரசாங்கத்தின் அதிகாரபூர்வ எரிபொருள் QR குறியீட்டைப் பெறுவதற்கான இணையதளத்தைப் போன்று போலியாக வடிவமைக்கப்பட்ட இணையதளங்கள் குறித்து...

20 15
செய்திகள்உலகம்

ஈரானின் முக்கிய இலக்குகள் மீது தாக்குதல்: உச்ச தலைவர் பயன்படுத்திய விமானத்தை அழித்ததாக இஸ்ரேல் அறிவிப்பு

இஸ்ரேலிய இராணுவம் நேற்று இரவு தெஹ்ரானின் மெஹ்ராபாத் விமான நிலையத்தை இலக்கு வைத்து நடத்திய தாக்குதலில்,...