25 68cd8eedd5e90
செய்திகள்இலங்கை

பாதாள உலகக் குற்றவாளி ‘கெஹெல்பத்தர பத்மே’வின் ரூ. 50 மில்லியன் சொத்துக்கள் பறிமுதல்!

Share

தற்போது கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் பாதாள உலகக் குற்றவாளியான ‘கெஹெல்பத்தர பத்மே’வின் ரூ. 50 மில்லியன் மதிப்புள்ள சொத்துக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் சொத்துக்கள் அனைத்தும் சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர், இந்தோனேசியாவில் தலைமறைவாக இருந்தபோது, ​​பாதாள உலகக் குற்றவாளிகளான கெஹெல்பத்தர பத்மே, கமாண்டோ சலிந்த, பெக்கோ சமன் மற்றும் தெம்பிளி லஹிரு ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

உதவி காவல் கண்காணிப்பாளர் ரோஹன் ஒலுகல மற்றும் உதவி காவல் கண்காணிப்பாளர் மஹிந்த ஜெயசுந்தர ஆகியோரின் தலைமையில், இலங்கையில் இருந்து சென்ற குழுவினரால் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்தச் சந்தேக நபர்களை இலங்கைக்குக் கொண்டு வந்து விசாரித்ததில், நாட்டில் செயற்பட்டு வந்த பாரிய போதைப்பொருள் வலையமைப்பு மற்றும் கொலை குற்றங்கள் தொடர்பான பல முக்கியமான உண்மைகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

மேலும், அண்மையில் பத்மே வழங்கிய தகவலின் அடிப்படையில், தேடப்பட்டு வந்த முக்கியக் குற்றவாளியான இஷாரா செவ்வந்தியும் நேபாளத்தில் வைத்து கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
4 1
அரசியல்இலங்கைசெய்திகள்

உங்களது ஆட்சிக்காலத்திலேயே காணிகளை விடுவியுங்கள்: ஜனாதிபதியிடம் நாகதீப விகாராதிபதி நேரில் வலியுறுத்தல்!

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் தனியார் காணிகளை மீண்டும் அவர்களிடமே ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுர...

25 68ed5a882ec6d
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சித்திரவதை செய்த பொலிஸ் பரிசோதகருக்கு 7 ஆண்டுகள் சிறை: மொனராகலை மேல் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

நபர் ஒருவரைத் தாக்கி காயப்படுத்தியமை மற்றும் கொடூரமாகச் சித்திரவதை செய்த குற்றத்திற்காகப் பொலிஸ் பரிசோதகர் ஒருவருக்கு...

645574 4228922 updates
உலகம்செய்திகள்

அண்டார்டிகா பனிக்கடியில் ஒளிந்திருக்கும் மர்ம உலகம்: அதிநவீன செயற்கைக்கோள் மூலம் புதிய வரைபடம் வெளியீடு!

அண்டார்டிகாவை மூடியுள்ள பல்லாயிரக்கணக்கான அடி ஆழமான பனிப்படலத்திற்குக் கீழே மறைந்திருக்கும் நிலப்பரப்பு குறித்து சர்வதேச விஞ்ஞானிகள்...

articles2FFE3TpF1W8KlSV5Uh5Ngm
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மீண்டும் தண்டவாளத்தில் ரயில்கள்: திருகோணமலை, மட்டக்களப்பு இரவு நேர சேவைகள் ஜனவரி 20 முதல் ஆரம்பம்!

திட்வா (Titwa) புயல் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்பு கோட்டையிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு வரையான இரவு...