8a6b4b60 6e06 11ed aeb3 a7cd8ccf293b.jpg
செய்திகள்இலங்கை

இலங்கையில் ஐஸ் போதைப்பொருள் பாவனை அதிகரிப்பு: 10 மாதங்களில் 60,000 பேர் கைது!

Share

இலங்கையில் மெத்தம்பேட்டமைன் (Methamphetamine) அல்லது ‘ஐஸ்’ என அழைக்கப்படும் போதைப்பொருள் பயன்பாடு மிக வேகமாக அதிகரித்து வருவதாக அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், சபையின் ஆராய்ச்சிப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் தாமர தர்ஷன பின்வரும் தகவல்களை வெளியிட்டார்:

இந்த ஆண்டின் முதல் 10 மாதங்களில் மாத்திரம் ‘ஐஸ்’ போதைப்பொருள் பாவனை தொடர்பாக 60,000-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதிவேக வளர்ச்சி: ஹெரோயின் மற்றும் கஞ்சா ஆகியவற்றுடன் ஒப்பிடும்போது, ‘ஐஸ்’ பயன்பாடு தற்போது மிகத் தீவிரமாகப் பரவி வருகின்றது. கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களிலேயே இந்தப் போதைப்பொருள் பாவனை அதிகளவில் பதிவாகியுள்ளது.

சிகிச்சை மற்றும் புனர்வாழ்வுப் பிரிவின் பணிப்பாளர் சாந்த கமகே குறிப்பிடுகையில், 20 முதல் 30 வயதுக்கு இடைப்பட்ட இளைஞர்களே இந்தப் போதைப்பொருள் பாவனைக்கு அதிகளவில் அடிமையாகியுள்ளதாகத் தெரிவித்தார்.

போதைப்பொருள் பயன்படுத்துபவர்களில் 99% வீதமானோர் ஒரே வகையான போதைப்பொருளுக்குக் கட்டுப்படாமல், சந்தர்ப்பத்திற்கேற்ப ‘ஐஸ்’, கஞ்சா அல்லது ஹெரோயின் என ஒன்றுக்கும் மேற்பட்ட போதைப்பொருட்களை மாற்றி மாற்றிப் பயன்படுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்த அபாயகரமான போக்கைச் சட்ட அமுலாக்கம் மற்றும் விழிப்புணர்வு மூலம் கட்டுப்படுத்த வேண்டியது அவசியம் என அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

 

 

Share
தொடர்புடையது
images 3 6
உலகம்செய்திகள்

பிரித்தானியா ஸ்தம்பிக்குமா? ஒரு வார கால முழு அடைப்பிற்கு அழைப்பு விடுத்துள்ள ‘he Great British National Strike அமைப்பு!

பிரித்தானியாவில் அதிகரித்து வரும் புலம்பெயர்தல் விவகாரங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், நாடு தழுவிய ரீதியில் ஒரு...

Dead 1200px 22 10 28 1000x600 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் சோகம்: மகள் மூட்டிய குப்பைத் தீ பரவி படுக்கையில் இருந்த தாய் பரிதாப மரணம்!

யாழ்ப்பாணம் – அரியாலையில் மகள் மூட்டிய குப்பைத் தீயானது எதிர்பாராத விதமாக வீட்டிற்குள் பரவியதில், படுக்கையில்...

archuna bail
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எம்.பி இராமநாதன் அர்ச்சுனாவுக்கு கொலை அச்சுறுத்தல்: மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு தொலைபேசியில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கு இன்று(29) மல்லாகம்...

virat kohli 183099488 sm
விளையாட்டுசெய்திகள்

விராட் கோலியின் இன்ஸ்டாகிராம் பக்கம் திடீர் மாயம்: நள்ளிரவு ‘ஷாக்’ கொடுத்துவிட்டு மீண்டும் திரும்பிய ‘கிங்’!

இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் விராட் கோலியின் அதிகாரபூர்வ இன்ஸ்டாகிராம் பக்கம் (@virat.kohli) இன்று (30) அதிகாலை...