23 6535db6a64ba7
செய்திகள்இலங்கை

மோசமான காலநிலையால் இலங்கையில் 5 இலட்சத்திற்கும் அதிகமான சிறுவர்கள் பாதிப்பு – ஐக்கிய நாடுகள் சபை கவலை!

Share

இலங்கையில் அண்மைக் காலமாக நிலவி வரும் சீரற்ற காலநிலையால் சுமார் 527,000 சிறுவர்கள் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை (UN) தனது சமீபத்திய அறிக்கையில் எச்சரித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையின்படி, நாட்டின் தற்போதைய சூழல் மிகவும் கவலைக்கிடமாக உள்ளது நாட்டில் உள்ள சுமார் மூன்று வீடுகளில் ஒரு வீடு (1 in 3 households) கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்நோக்குகின்றது.

போதிய வருமானம் மற்றும் உணவு விநியோகத் தடைகள் காரணமாக, பல குடும்பங்கள் தங்களது அன்றாட உணவு உட்கொள்ளும் அளவைக் குறைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

வெள்ளம் மற்றும் மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களால் இடம்பெயர்ந்துள்ள சிறுவர்கள், சுத்தமான குடிநீர் மற்றும் சத்தான உணவின்றி பல்வேறு தொற்றுநோய்களுக்கு உள்ளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள சிறுவர்களின் நலன் மற்றும் போசாக்கினை உறுதி செய்யச் சர்வதேச சமூகமும் அரசாங்கமும் ஒருங்கிணைந்து அவசர நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது.

 

 

Share
தொடர்புடையது
29 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பேலியகொட மீன் சந்தை கழிவு உரம் தயாரிப்பு: பொது சுகாதார பரிசோதகர் விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு!

பேலியகொட மெனிங் மீன் சந்தையில் எஞ்சியிருக்கும் மீன்களைப் பயன்படுத்தி தனியார் நிறுவனம் ஒன்று உரம் தயாரிக்கும்...

28 4
செய்திகள்விளையாட்டு

2026 உலகக்கோப்பை கால்பந்து தொடரிலிருந்து ஈரான் விலகல்: விளையாட்டுத்துறை அமைச்சர் அறிவிப்பு!

அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளின் கூட்டுத் தலைமையின்கீழ் நடைபெறவுள்ள 2026 உலகக்கோப்பை கால்பந்து...

27 4
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணை பதற்றம்: மசகு எண்ணெய் விலை 200 டொலரை எட்டக்கூடும் என ஈரான் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவும் தீவிர போர்ச் சூழல் மற்றும் ஹோர்முஸ் நீரிணையில் வர்த்தகக் கப்பல்கள் மீது...

26 5
செய்திகள்உலகம்

சுவிட்சர்லாந்தில் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 6 பேர் பலி: 5 பேர் படுகாயம்!

சுவிட்சர்லாந்தின் பிரிபொங் (Fribourg) மாகாணத்தில் உள்ள கெர்சர் (Kerzers) நகரில் நேற்று (10) மாலை இடம்பெற்ற...