Parliament SL 2 850x460 acf cropped 6
செய்திகள்அரசியல்இலங்கை

நாடாளுமன்ற அமர்வு ஒத்தி வைப்புக்கான காரணத்தை வெளியிட்ட எதிர்க்கட்சி

Share

‘கோப்’ மற்றும் ‘கோபா’ குழுக்களின் தலைமைப்பதவிகளை மாற்றியமைக்கவே நாடாளுமன்ற அமர்வை ஜனாதிபதி இடைநிறுத்தியுள்ளார் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மரிக்கார் கூறியவை வருமாறு,

“அரச பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப்) மற்றும் அரச கணக்குகள் பற்றிய குழு (கோபா) ஆகியவற்றின் தலைமைப்பதவியை ஆளுங்கட்சியினரே வகிக்கின்றனர். அவர்கள் மிகவும் சிறப்பாக செயற்படுகின்றனர்.  அரச நிறுவனங்களில் நடக்கும் ஊழல்கள், மோசடிகள் அம்பலமாகின்றன.

இதனால் தான் மேற்படி குழுக்களை கலைத்து புதியவர்களை நியமிக்கும் நோக்கில் நாடாளுமன்ற அமர்வு இடைநிறுத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்ற அமர்வு இடைநிறுத்தப்பட்டால், புதிய அமர்வு ஆரம்பமாகும்போது புதிய தெரிவுக்குழுக்கள் அமைக்கப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.” – என்றார்.

 

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 13
இலங்கைசெய்திகள்

இலங்கையில் மற்றுமொரு விபத்து – சிறுவர்கள், பெண்கள் உட்பட 37 பேர் காயம்

கண்டியில் நேற்று இரவு இடம்பெற்ற பேருந்து விபத்தில் 37 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பேருந்து...

19 12
இலங்கைசெய்திகள்

இலங்கை முழுவதும் உப்பு தட்டுப்பாடு – ஒரு கிலோ கிராம் 500 ரூபாய்..!

நாட்டில் உப்பு இறக்குமதியில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது....

18 12
உலகம்செய்திகள்

இலங்கை தமிழர்களுக்கு நடந்த கொடூரம்.. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்தில் குண்டு வீச முயற்சி

தமிழ்நாடு சென்னையின் மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள, முன்னாள் முதல்வர்களான அண்ணாத்துரை மற்றும் கருணாநிதி ஆகியோரின் நினைவிடங்களை...

16 14
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபைக்கு உறுப்பினர்களை நியமிப்பதில் ஐ.தே.க.வுக்கு சிக்கல்

கொழும்பு மாநகர சபைக்கு உறுப்பினர்களை நியமிப்பதில் ஐக்கிய தேசியக் கட்சி பெரும் சிக்கலை எதிர்கொண்டுள்ளதாக அரசியல்...