sajith 1200x550 1
செய்திகள்அரசியல்இலங்கை

இணையவழி கடன் மாபியாவில் சிக்கி இளைஞர் தற்கொலை: சட்டவிரோத நிறுவனங்களை ஒழிக்க முறையான சட்டம் தேவை – சஜித் பிரேமதாச கோரிக்கை!

Share

அத்தனக்கல்ல பிரதேச செயலகப் பிரிவின் வெலகெதர எனும் கிராமத்தில் ஹிமாயா செவ்வெந்தி என்ற இளம் பெண் இணையவழி கடன் மாபியாவில் சிக்கி, தன் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் தொடர்பாக அரசாங்கம் உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று வியாழக்கிழமை (நவ 13) பாராளுமன்றத்தில் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் இவ்விவகாரம் குறித்துப் பேசிய சஜித் பிரேமதாச, பின்வரும் கோரிக்கைகளை முன்வைத்தார். இது போன்ற இணையவழி கடன் வழங்கும் பல சட்டவிரோத நிறுவனங்கள் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார். இது தொடர்பாக ஒரு முறையானதொரு சட்டத்தை உடனடியாக அமுல்படுத்தப்பட வேண்டும்.

மேலும் பல உயிர்கள் பலியாகும் முன், இந்த விவகாரத்தை ஆராய்ந்து பார்த்து, இந்தச் சட்டவிரோத மாபியாவை இல்லாதொழிப்பதற்காக அரசாங்கம் எடுக்கவுள்ள நடவடிக்கைகளைச் சபையில் முன்வைக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்தார்.

இணையவழி கடன் மாபியாக்களின் அச்சுறுத்தல் காரணமாக இவ்வாறான துயரச் சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே எதிர்க்கட்சித் தலைவரின் வலியுறுத்தலாக உள்ளது.

Share
தொடர்புடையது
images 4
செய்திகள்அரசியல்இலங்கை

ரணில் – நாமல் புதிய கூட்டணி? ஐக்கிய மக்கள் சக்தியுடனான பேச்சு முறிந்தால் மாற்றுத் திட்டத்திற்கு தயார்!

ஐக்கிய தேசியக் கட்சி (UNP) மற்றும் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி (SJB)...

26 69807748e747c
செய்திகள்உலகம்

மேற்குக் கரையில் தீவிரமடையும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு: பூர்வீக நிலங்களிலிருந்து பலஸ்தீனியர்கள் வெளியேற்றம்!

இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில், பலஸ்தீனியர்களை அவர்களது பூர்வீக நிலங்களில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கைகளை இஸ்ரேல்...

articles2FUBt74sYE7LHAHmjLFnpe
செய்திகள்அரசியல்இலங்கை

சிஐடி முன் பிரசன்ன ரணதுங்க: அரசு தனது தோல்விகளை மறைக்கவே எங்களை அழைக்கிறது!

திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் ‘கெஹெல்பத்தர பத்மே’ என்பவருடனான தொடர்பு குறித்து வாக்குமூலம் அளிப்பதற்காக, முன்னாள் அமைச்சர்...

image eae410f15d
செய்திகள்அரசியல்இலங்கை

NPP உறுப்பினர் ஜகத் மனுவர்ணவை கைது செய்ய உத்தரவு: கோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணை!

தேசிய மக்கள் சக்தியின் (NPP) நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ணவை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில்...