3000 பாடசாலைகள் முதற்கட்டமாக திறப்பு!

1599582341 president 2

நாட்டில் 3000 பாடசாலைகளை முதற்கட்டமாக திறப்பதற்கு தீர்மானம் செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதனடிப்படையில், 100க்கும் குறைந்தளவு மாணவர்களைக் கொண்டு இயங்கும் பாடசாலைகளை முதற்கட்டமாக திறப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

100 இற்கும் குறைந்தளவான மாணவர்களைக் கொண்ட கிராமப்புற பாடசாலைகளை முதற்கட்டமாக ஆரம்பிக்க தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நாட்டில் பாடசாலைகள் மூடப்பட்டதால், சுமார் 7 லட்சம் மாணவர்கள் கல்வி கிடைக்காமல் போனதால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தலைமையில் ‘சூம்’ தொழில்நுட்பம் ஊடாக நடைபெற்ற கொவிட் தடுப்பு செயலணி கூட்டத்திலேயே இவ் விடயம் தீர்மானிக்கப்பட்டுள்ளது என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

 

Exit mobile version