Capture
செய்திகள்இந்தியா

ஐயோ! எங்கட குளத்தை காணேல – முறையிட்ட மக்கள்!!

Share

பூந்தமல்லி ஒன்றியத்துக்குட்பட்ட அகரம்மேல் ஊராட்சியில் பல ஆண்டுகளாக பொதுமக்கள் பயன்பாட்டில் மூக்குத்திக்குளத்தை மணலால் மூடி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் மூக்குத்தி குளத்தை காணவில்லை என்று அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர்.

இந்த நிலையில் குளத்தில் உள்ள ஆக்கிரமிப்பை மீட்டு பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று அமைச்சர் சா.மு.நாசர், பூந்தமல்லி எம்.எல்.ஏ. ஆ.கிருஷ்ணசாமி ஆகியோரிடம் அகரம் மேல் கிராமமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதுபற்றி அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க அமைச்சர் சா.மு. நாசர் உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து மாவட்ட கவுன்சிலர் ஏ.ஜி.ரவி, வட்டாரவளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியம் மற்றும் அதிகாரிகள் மூக்குத்தி குளம் இருந்த இடத்தில் ஆய்வு செய்தனர். அப்போது குளம் முழுவதும் மணல் நிரப்பி மூடப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து 2 ஜே.சி. பி. எந்திரங்கள் வரவழைக்கப்பட்டு குளத்தில் கொட்டப்பட்டு இருந்து மணலை அகற்றினர். தொடர்ந்து மூடப்பட்ட குளம் தோண்டப்பட்டு வருகிறது.

மர்ம கும்பலால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட குளத்தின் பகுதி முழுவதும் மீட்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ. 5 கோடி ஆகும்.

மூக்குத்தி குளத்தை முழுமையாக தோண்டி, தூர்வாரி தண்ணீர் சேமிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

#WorldNews

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...