23 64b883bc2cf55
செய்திகள்இலங்கை

வடமேல் மாகாண மக்களுக்கு மகிழ்ச்சிச் செய்தி: ஒரு நாளில் தேசிய அடையாள அட்டை சேவை குருணாகலில் ஆரம்பம்!

Share

வடமேல் மாகாண மக்களின் வசதி கருதி, தேசிய அடையாள அட்டையை ஒரு நாளில் வழங்கும் சேவை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. ஆட்கள் பதிவுத் திணைக்களத்தின் மாகாண அலுவலகம், குருணாகலில் டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்னவின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.

இந்தச் சேவையின் மூலம், வடமேல் மாகாண மக்கள் இனிமேல் தேசிய அடையாள அட்டைக்காக கொழும்பில் உள்ள தலைமை அலுவலகத்திற்குப் பயணிக்கத் தேவையில்லை. குருணாகல் மாகாண அலுவலகத்திலேயே சில மணி நேரங்களில் அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ள முடியும்.

காலி மற்றும் நுவரெலியாவில் ஏற்கனவே இந்தச் சேவை வெற்றிகரமாகச் செயற்படும் நிலையில், இலத்திரனியல் தேசிய அடையாள அட்டைத் திட்டத்தின் நிதி மற்றும் தொழில்நுட்ப ஆதரவுடன் இது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

அரச துறையில் விரைவான, நம்பகமான சேவைகளை வழங்குவதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை இது மேலும் பலப்படுத்துகிறது எனவும், எதிர்காலத்தில் ஏனைய மாகாணங்களிலும் இதுபோன்ற அலுவலகங்கள் திறக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
62a15150 5261 11f0 a2ff 17a82c2e8bc4.jpg
செய்திகள்உலகம்

வரலாறு படைத்த ஜோஹ்ரான் மம்தானி: நியூயார்க் நகரின் முதல் முஸ்லிம் மற்றும் இளம் மேயராகத் தேர்வு!

அமெரிக்காவின் நியூயோர்க் நகர மேயராக இருந்தவர் எரிக் ஆடம்ஸ். இவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டு...

11ad0a96d3aaa13d73a54e4883f2f59c
உலகம்செய்திகள்

கென்டகி விமான நிலையத்தில் கோர விபத்து: சரக்கு விமானம் தரையில் விழுந்து தீப்பிடித்தது – 3 பேர் பலி!

அமெரிக்காவின் கென்டகி மாகாணம், லுயிஸ்விலா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஹவாய் மாகாணம் ஹொனொலுலு நகருக்கு...

mcms
உலகம்செய்திகள்

வீரப்பன் தேடுதல் வேட்டை: பாதிக்கப்பட்ட மக்களுக்கு ₹ 2.59 கோடி இழப்பீடு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது அதிரடிப் படையால் (Special Task Force – STF) பாதிக்கப்பட்ட...