Omicron 3 1
செய்திகள்இந்தியாஉலகம்

2022ல் உலகை ஆளும் ஓமைக்ரான்!!

Share

எதிர்வரும் 2022 ஆண்டு உலகை தனது கைக்குள் ஓமைக்ரான் வைரஸ் போட்டுக்கொள்ளும் என சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் ஆரூடம் வெளியிட்டுள்ளனர்.

2019 டிசம்பர் இறுதியில் சீனாவில் துவங்கிய கொவிட் எனும் கொடிய வைரஸ் மெல்ல மெல்ல உலக நாடுகள் முழுவதும் பரவியது. இதில் பலரும் சிக்கியதுடன் பல இலட்சக்கணக்கான உயிர்களும் காவு கொள்ளப்பட்டன.

தற்போது கொரோனா வைரஸை தொடர்ந்து தற்போது ஓமைக்ரான் என்கிற வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி ஆட்கொண்டு வருகிறது.

இந்தியாவிலும் இந்த வைரஸ் வேகமாக பரவி வருதுடன் இந்தியாவில் மட்டும் 200 பேருக்கும் மேல் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் ஏற்கனவே ஒருவர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், மேலும் 33 பேருக்கு ஒமைக்ரான் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.மேலும், ஓமைக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டு சென்னை கிண்டி கிங்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 3 பேர் சமீபத்தில் குணமடைந்து வீடு திரும்பினர்.

இந்நிலையில், 2022ம் ஆண்டு உலகம் முழுவதும் ஓமைக்ரான் ஆதிக்கம் செலுத்தும் என சிங்கப்பூரை சேர்ந்த ஆய்வாளர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர்.

மேலும், 2 மாதங்களில் உலகமெங்கும் 300 கோடி பேருக்கு ஓமைக்ரான் பாதிப்பு ஏற்படலாம் என வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் சுகாதாரத்துறை நிறுவனம் எச்சரிக்கை செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கொடிய கொரோனாவுக்கே தாக்குப்பிடிக்க முடியாத உலக நாடுகள் இந்த ஓமைக்ரான் வைரஸிற்கு எவ்வாறு தாக்குப்பிடிக்கப்போகின்றது என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம்!!

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 102
செய்திகள்இலங்கை

ரூபவாஹினி கூட்டுத்தாபன முன்னாள் தலைவர் மற்றும் பணிப்பாளர் நாயகம் விளக்கமறியலில்

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவால் (CIABOC) கைது செய்யப்பட்ட, இலங்கை ரூபவாஹினி...

Untitled 101
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வத்தளை நாயக்ககந்த பாடசாலையில் புதிய முதல்வர் நியமனத்திற்கு எதிர்ப்பு போராட்டம்!

வத்தளை, நாயக்ககந்த பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற கத்தோலிக்க மகளிர் பாடசாலையான பாலிகா மகா வித்தியாலயத்திற்கு (குட்...

Untitled 100
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பாதுகாப்பு முன்னெச்சரிக்கை: ஈரானின் மஷ்ஹத் நகரில் ரயில் சேவைகள் அதிரடி நிறுத்தம்!

ஈரானின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள முக்கிய நகரமான மஷ்ஹத்தின் (Mashhad) ஆளுநர், அந்த நகரில் உள்ள...

Untitled 99
செய்திகள்இலங்கை

சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப உள்நாட்டு எரிவாயு விலையில் மாற்றம்: தட்டுப்பாடின்றி வழங்க அமைச்சர் உறுதி!

உலகளாவிய சந்தையில் எரிவாயு விலையில் ஏற்பட்ட திடீர் உயர்விற்கு இணையாக, இலங்கையிலும் உள்நாட்டு எரிவாயு விலைகள்...