அடுத்த கல்வியாண்டில் இருந்து, தரம் 1 மற்றும் தரம் 6 மாணவர்களுக்குப் பாடப்புத்தகங்கள் வழங்கப்படாது என்று கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
புதிய கல்வி சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இதன்படி, தரம் 1 மற்றும் தரம் 6 மாணவர்களுக்குப் பாடப்புத்தகங்களுக்குப் பதிலாக சுய கற்றல் கையேடுகள் (Self-Learning Guides) வழங்கப்படும்.
இந்தச் சுய கற்றல் கையேடுகள் தற்போது அச்சிடப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், இது குறித்த மாணவர்களுக்கான பாடசாலை பைகளின் எடையும் குறைக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.