ananda wijepala
செய்திகள்இலங்கை

நுவரெலியா மாவட்டத்தில் சிவில் பாதுகாப்பு சேவை அதிகாரிகள் எவருமில்லை: அநுராதபுரத்தில் 7,100 பேர் – அமைச்சர் ஆனந்த விஜேபால பாராளுமன்றத்தில் தகவல்!

Share

இலங்கையில் நுவரெலியா மாவட்டத்தில் மாத்திரமே எந்தவொரு சிவில் பாதுகாப்பு சேவை அதிகாரியும் சேவையில் இல்லை என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அநுராதபுர மாவட்டத்தில் மாத்திரம் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் சேவையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான இரண்டாம் விவாதத்துக்கான நாடாளுமன்ற அமர்வில் வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போதே அவர் இந்தத் தகவல்களை வெளியிட்டார்.

யாழ்ப்பாணத்தில் 56, முல்லைத்தீவில் 1,394 வவுனியாவில் 997, கிளிநொச்சியில் 1858 அநுராபுரத்தில் 7100, பொலன்னறுவையில் 2,772, மொனராகலையில் 2,812 சிவில் பாதுகாப்பு அதிகாரிகளும் சேவையில் ஈடுபட்டுள்ளனர்.

பதுளையில் 350 அம்பாந்தோட்டையில் 473 காலியில் 87 மாத்தறையில் 116 அம்பாறையில் 5077 மட்டக்களப்பில் 269 திருகோணமலையில் 4193 கொழும்பில் 825 கம்பஹாவில் 518 களுத்துறையில் 423 சிவில் பாதுகாப்பு அதிகாரிகளும் சேவையில் ஈடுபட்டுள்ளனர்.

அதேபோன்று, கண்டியில் 703 மாத்தளையில் 114, குருநாகலில் 245 புத்தளத்தில் 638 இரத்தினபுரியில் 293 கேகாலையில் 109 அதிகாரிகளுமாக மொத்தமாக 31,422 சிவில் பாதுகாப்பு அதிகாரிகளும் சேவையில் ஈடுபட்டுள்ளதாக அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

எனினும், நுவரெலியா மாவட்டத்தில் எந்தவொரு சிவில் பாதுகாப்பு சேவை அதிகாரியும் இல்லை என்று அமைச்சர் ஆனந்த விஜேபால இதன்போது சுட்டிக்காட்டினார்.

Share

Recent Posts

தொடர்புடையது
121664732
இலங்கைசெய்திகள்

உயர்தரப் பரீட்சை மாணவி 3 மாடிக் கட்டிடத்திலிருந்து குதித்துத் தற்கொலை முயற்சி: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி வைத்தியசாலையில் அனுமதி!

பம்பலப்பிட்டி பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில், இம்முறை உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவி ஒருவர் இன்று...

images 2 3
செய்திகள்இலங்கை

நினைவேந்தல் காணி விவகாரம்: இரு தரப்பினரும் ஒற்றுமையாக வாருங்கள்; இல்லையேல் நல்லூர் நிலம் வழங்கப்படாது – முதல்வர் மதிவதனி அதிரடி அறிவிப்பு!

நவம்பர் 27 நினைவேந்தல் நிகழ்வைக் கொண்டாடுவது தொடர்பாகக் கட்சிகளுக்கு இடையே ஒற்றுமை இன்மையால், இரு தரப்பினருக்கும்...

bk7qlddg hamas afp 625x300 19 February 25
செய்திகள்உலகம்

இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தம்: 15 பாலஸ்தீனிய உடலங்களுக்குப் பதிலாக மேலும் ஒரு இஸ்ரேலிய வீரரின் உடலை ஹமாஸ் ஒப்படைத்தது!

எப்போது வேண்டுமானாலும் முறியலாம் என்ற அபாயத்தில் இருக்கும் காஸா போர் நிறுத்த ஒப்பந்தத்தின் அமுலாக்கம் தொடர்ந்து...

251107 Olivier Rioux ch 1044 acd69e
உலகம்செய்திகள்

7 அடி 9 அங்குல உயர கனேடிய இளைஞர் ஒலிவியர் ரியூ: உலகின் மிக உயரமான கூடைப்பந்தாட்ட வீரராக சாதனை!

அமெரிக்காவின் ஃப்ளோரிடா பல்கலைக்கழக கூடைப்பந்தாட்ட அணியில் இணைந்துள்ள கனேடிய இளைஞர் ஒலிவியர் ரியூ (Olivier Rioux),...