ananda wijepala
செய்திகள்இலங்கை

நுவரெலியா மாவட்டத்தில் சிவில் பாதுகாப்பு சேவை அதிகாரிகள் எவருமில்லை: அநுராதபுரத்தில் 7,100 பேர் – அமைச்சர் ஆனந்த விஜேபால பாராளுமன்றத்தில் தகவல்!

Share

இலங்கையில் நுவரெலியா மாவட்டத்தில் மாத்திரமே எந்தவொரு சிவில் பாதுகாப்பு சேவை அதிகாரியும் சேவையில் இல்லை என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அநுராதபுர மாவட்டத்தில் மாத்திரம் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் சேவையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான இரண்டாம் விவாதத்துக்கான நாடாளுமன்ற அமர்வில் வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போதே அவர் இந்தத் தகவல்களை வெளியிட்டார்.

யாழ்ப்பாணத்தில் 56, முல்லைத்தீவில் 1,394 வவுனியாவில் 997, கிளிநொச்சியில் 1858 அநுராபுரத்தில் 7100, பொலன்னறுவையில் 2,772, மொனராகலையில் 2,812 சிவில் பாதுகாப்பு அதிகாரிகளும் சேவையில் ஈடுபட்டுள்ளனர்.

பதுளையில் 350 அம்பாந்தோட்டையில் 473 காலியில் 87 மாத்தறையில் 116 அம்பாறையில் 5077 மட்டக்களப்பில் 269 திருகோணமலையில் 4193 கொழும்பில் 825 கம்பஹாவில் 518 களுத்துறையில் 423 சிவில் பாதுகாப்பு அதிகாரிகளும் சேவையில் ஈடுபட்டுள்ளனர்.

அதேபோன்று, கண்டியில் 703 மாத்தளையில் 114, குருநாகலில் 245 புத்தளத்தில் 638 இரத்தினபுரியில் 293 கேகாலையில் 109 அதிகாரிகளுமாக மொத்தமாக 31,422 சிவில் பாதுகாப்பு அதிகாரிகளும் சேவையில் ஈடுபட்டுள்ளதாக அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

எனினும், நுவரெலியா மாவட்டத்தில் எந்தவொரு சிவில் பாதுகாப்பு சேவை அதிகாரியும் இல்லை என்று அமைச்சர் ஆனந்த விஜேபால இதன்போது சுட்டிக்காட்டினார்.

Share
தொடர்புடையது
1276730 0.jpeg
செய்திகள்உலகம்

ஈரான் சிறைப்பிடித்த எண்ணெய்க் கப்பல் ‘தலாரா’ விடுவிப்பு: 21 பணியாளர்களும் பாதுகாப்பாக உள்ளனர்!

ஹாா்முஸ் நீரிணைப் பகுதியில் ஈரான் கடந்த வாரம் சிறைப்பிடித்த, மாா்ஷல் தீவுகளின் கொடியேற்றப்பட்ட ‘தலாரா’ (Talara)...

pm modi 13 20251119144744
இந்தியாசெய்திகள்

ஜி20 மாநாட்டில் பங்கேற்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தென்னாபிரிக்காவிற்குப் பயணம்!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தென்னாபிரிக்காவிற்கு விஜயம் செய்யத் தயாராகி வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன....

images 5 7
செய்திகள்பிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் சோகம்: கால் தவறி கிணற்றில் வீழ்ந்த வெளிநாட்டுப் பிரஜை உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் – ஆறுகால்மடம் பகுதியில் நபரொருவர் கால் தவறி கிணற்றுக்குள் வீழ்ந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர்...

images 4 8
இலங்கைசெய்திகள்

அரச மருத்துவமனைகளில் 150 மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு: சிகிச்சை சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்!

அரச மருத்துவமனைகளில் சுமார் 150 மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்...