வேளாண்மை, கால்நடை, நிலம் மற்றும் நீர்ப்பாசன அமைச்சகத்தின் கீழ் இயங்கும் வேளாண்மை மற்றும் விவசாய காப்பீட்டு வாரியம், நீரில் மூழ்கும் நடவடிக்கைகளில் ஈடுபடும் மீனவர்களுக்காக விசேட காப்பீட்டுத் திட்டமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆபத்தான சூழலில் கடற்தொழில் புரியும் மீனவர்களின் குடும்பப் பாதுகாப்பை உறுதி செய்வதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.
காப்பீட்டுத் திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:
மீன்பிடி நடவடிக்கைகளின் போது நீரில் மூழ்கி மரணம் ஏற்படும் பட்சத்தில், பாதிக்கப்பட்ட மீனவரின் குடும்பத்தினருக்கு ரூ. 1.2 மில்லியன் (12 இலட்சம்) இழப்பீடாக வழங்கப்படும்.
கடல் அல்லது உள்நாட்டு நீர்நிலைகளில் டைவிங் (Diving) செய்யும் போது ஏற்படும் விபத்துகளால் தற்காலிக உடல் இயலாமை ஏற்பட்டால், அதற்கும் இக்காப்பீட்டின் கீழ் இழப்பீடு பெற முடியும்.
இத்திட்டமானது ரூ. 1.2 மில்லியன் மற்றும் ரூ. 1.5 மில்லியன் என இரண்டு பிரிவுகளில் கிடைக்கிறது.
இவ்வளவு பெரிய காப்பீட்டுத் தொகையைப் பெறுவதற்கு, மீனவர்கள் ஆண்டு பிரீமியமாக (Premium) வெறும் ரூ. 1,920 மட்டுமே செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த புதிய காப்பீட்டுத் திட்டம், கடலில் சவால்களை எதிர்கொள்ளும் மீனவர்களுக்கு ஒரு வலுவான சமூகப் பாதுகாப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தகுதியுள்ள மீனவர்கள் உடனடியாக இந்த வாரியத்தைத் தொடர்புகொண்டு தங்களை இணைத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

