cartoon consitution sign book
செய்திகள்அரசியல்இலங்கை

புதிய அரசியலமைப்பு ஜனவரியில் ஜனாதிபதி கரங்களுக்கு!!!

Share

புதிய அரசியலமைப்புக்கான வரைவு நகலானது 2022 ஜனவரியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கையளிக்கப்படவுள்ளதென தெரியவருகின்றது.

புதிய அரிசியலமைப்புக்கான வரைவு நகலை தயாரிப்பதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா தலைமையில் நிபுணர்கள் குழுவொன்று அமைக்கப்பட்டது.

இந்த குழுவானது பொதுமக்கள், அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் என பல தரப்பினரிடமும் கருத்துகளையும், ஆலோசனைகளையும் பெற்றது.

இந்நிலையில் நிபுணர் குழுவின், புதிய அரசியலமைப்புக்கான சட்டமூலம் 2021 டிசம்பரில் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும் எனவும், 2022 ஜனவரி முதல் புதிய அரசியலமைப்பை உருவாக்கும் பணி நாடாளுமன்றத்தில் ஆரம்பமாகும் எனவும் அமைச்சர் பீரிஸ் அறிவித்திருந்தார்.

ஆனால் இன்னும் நிபுணர் குழுவின் அறிக்கை கையளிக்கப்படவில்லை. அது தொடர்பில் வினவப்பட்டபோதே 2022 ஜனவரியில் கையளிக்கப்படலாம் என தெரியவந்தது.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...