சுங்கத் துறையால் தடுத்து வைக்கப்பட்டிருந்த வாகனங்களை விடுவிப்பதற்கு அனுமதி அளித்து, புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வர்த்தமானியை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அவர்கள் வெளியிட்டுள்ளார். நிபந்தனைகளுக்கு உட்பட்டு, உற்பத்தி நாடு அல்லாத வேறொரு நாட்டில் சர்வதேச நாணய கடிதம் (LC) திறக்கப்பட்டு இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை விடுவிக்க இது அனுமதிக்கிறது.
கடந்த மே மாதம் முதல் ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக் கட்டுப்பாட்டுச் சட்டத்தை மீறியதாகக் கூறி, துறைமுகங்களில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தன.
ஆவணங்கள் மற்றும் பதிவு தொடர்பான குறிப்பிட்ட நிபந்தனைகளைப் பூர்த்தி செய்தல் போன்ற நிபந்தனைகளுக்கு உட்பட்டு, இந்த அறிவித்தல் நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

