நெதன்யாகுவை அமெரிக்கா சிறைபிடிக்க வேண்டும்; பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் ஆவேசம்!

12566ad0 280b 11f0 8f57 b7237f6a66e6.jpg

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை “மனிதகுலத்தின் மிக மோசமான குற்றவாளி” என விமர்சித்துள்ள பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப், அவரை அமெரிக்கா கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

பாகிஸ்தானியத் தொலைக்காட்சி ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலில் கவாஜா ஆசிப் அவர், வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவைச் சிறைபிடித்ததைப் போல, அமெரிக்காவிற்கு உண்மையில் மனிதநேயத்தின் மீது நம்பிக்கை இருந்தால், நெதன்யாகுவையும் அவர்கள் ‘சிறைபிடிக்க’ வேண்டும்.

துருக்கி நாடு நினைத்தால் நெதன்யாகுவைக் கடத்த வாய்ப்புள்ளதாகவும், அதற்காகப் பாகிஸ்தானியர்கள் பிரார்த்தனை செய்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த 4,000 – 5,000 ஆண்டு கால வரலாற்றில், காசாவில் பாலஸ்தீனியர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கு இணையான அத்துமீறல்களை எந்தவொரு சமூகமும் செய்ததில்லை என அவர் வாதிட்டார்.

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன விவகாரத்தில் பாகிஸ்தான் நீண்டகாலமாக இஸ்ரேலைக் கடுமையாக விமர்சித்து வருகிறது. இருப்பினும், ஒரு நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் சர்வதேசத் தலைவரை “மிகப்பெரிய குற்றவாளி” என வெளிப்படையாகச் சாடியிருப்பது இராஜதந்திர ரீதியாகப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

Exit mobile version