24 676b50856afea
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனாதிபதி நிதியில் பாரிய முறைகேடு: 56 அரசியல்வாதிகளுக்கு சட்டவிரோதமாக 130 மில்லியன் ரூபா வழங்கல்!

Share

ஜனாதிபதி நிதியத்திலிருந்து (President’s Fund) கடந்த காலங்களில் 56 நாடாளுமன்ற மற்றும் மாகாண சபை உறுப்பினர்களுக்குச் சட்டத்திற்குப் புறம்பாக 130 மில்லியன் ரூபாவிற்கும் அதிக தொகை மருத்துவ உதவியாக வழங்கப்பட்டுள்ளதாகத் தேசிய தணிக்கை அலுவலகம் (National Audit Office) அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.

இந்த நிதி முறைகேடுகள் 2005 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரையிலான நீண்ட காலப்பகுதியில் இடம்பெற்றுள்ளன.

விண்ணப்பப் படிவம், வருமான வரம்பு, பிரதேச செயலாளரின் உறுதிப்படுத்தல் மற்றும் மருத்துவ உதவி வரம்புகள் போன்ற எந்தவொரு அடிப்படை விதிகளையும் பின்பற்றாமல் இந்த நிதிகள் வழங்கப்பட்டுள்ளன.

முன்னாள் பிரதமர் ஒருவருக்குச் சட்ட விதிகளுக்குப் புறம்பாக சுமார் 3 கோடி ரூபாய் மருத்துவ உதவியாக வழங்கப்பட்டுள்ளது. இதில் ஒரு கோடியே 37 இலட்சம் ரூபாய் ‘மீட்பு அடிப்படையில்’ (Recovery basis) வழங்கப்பட்ட போதிலும், அந்தத் தொகை இதுவரை மீள வசூலிக்கப்படவில்லை.

கஜனாதிபதி நிதியிலிருந்து கடன் வழங்க சட்டத்தில் இடமில்லாத நிலையிலும், நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு ஒரு கோடி ரூபாவிற்கும் அதிகமான தொகை வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தொகையும் இதுவரை அரசுக்குக் கிடைக்கவில்லை.

அரச நிதியைத் தகுதியற்ற நபர்களுக்கு, குறிப்பாக மக்கள் பிரதிநிதிகளுக்குச் சட்டவிரோதமான முறையில் பகிர்ந்தளிக்கப்பட்டமை தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கத் தணிக்கை அலுவலகம் பரிந்துரைத்துள்ளது.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...