24 676b50856afea
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனாதிபதி நிதியில் பாரிய முறைகேடு: 56 அரசியல்வாதிகளுக்கு சட்டவிரோதமாக 130 மில்லியன் ரூபா வழங்கல்!

Share

ஜனாதிபதி நிதியத்திலிருந்து (President’s Fund) கடந்த காலங்களில் 56 நாடாளுமன்ற மற்றும் மாகாண சபை உறுப்பினர்களுக்குச் சட்டத்திற்குப் புறம்பாக 130 மில்லியன் ரூபாவிற்கும் அதிக தொகை மருத்துவ உதவியாக வழங்கப்பட்டுள்ளதாகத் தேசிய தணிக்கை அலுவலகம் (National Audit Office) அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.

இந்த நிதி முறைகேடுகள் 2005 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரையிலான நீண்ட காலப்பகுதியில் இடம்பெற்றுள்ளன.

விண்ணப்பப் படிவம், வருமான வரம்பு, பிரதேச செயலாளரின் உறுதிப்படுத்தல் மற்றும் மருத்துவ உதவி வரம்புகள் போன்ற எந்தவொரு அடிப்படை விதிகளையும் பின்பற்றாமல் இந்த நிதிகள் வழங்கப்பட்டுள்ளன.

முன்னாள் பிரதமர் ஒருவருக்குச் சட்ட விதிகளுக்குப் புறம்பாக சுமார் 3 கோடி ரூபாய் மருத்துவ உதவியாக வழங்கப்பட்டுள்ளது. இதில் ஒரு கோடியே 37 இலட்சம் ரூபாய் ‘மீட்பு அடிப்படையில்’ (Recovery basis) வழங்கப்பட்ட போதிலும், அந்தத் தொகை இதுவரை மீள வசூலிக்கப்படவில்லை.

கஜனாதிபதி நிதியிலிருந்து கடன் வழங்க சட்டத்தில் இடமில்லாத நிலையிலும், நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு ஒரு கோடி ரூபாவிற்கும் அதிகமான தொகை வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தொகையும் இதுவரை அரசுக்குக் கிடைக்கவில்லை.

அரச நிதியைத் தகுதியற்ற நபர்களுக்கு, குறிப்பாக மக்கள் பிரதிநிதிகளுக்குச் சட்டவிரோதமான முறையில் பகிர்ந்தளிக்கப்பட்டமை தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கத் தணிக்கை அலுவலகம் பரிந்துரைத்துள்ளது.

 

 

Share
தொடர்புடையது
உலகம்செய்திகள்

126 ஆண்டுகள் பழமையான ‘பிரைட்டன் பேலஸ் பியர்’ விற்பனைக்கு வருகிறது: பல மில்லியன் பவுண்டுகள் விலை!

பிரித்தானியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றுலாத் தலங்களில் ஒன்றான 126 ஆண்டுகள் பழமையான ‘பிரைட்டன் பேலஸ் பியர்’...

b7e08360 48da 11f0 beef ebd92399e8ec.jpg
உலகம்செய்திகள்

போர் நிறுத்தத்தை மீறி இஸ்ரேல் தாக்குதல்: மேற்குக் கரையில் இளைஞர் சுட்டுக்கொலை; காசாவிலும் பதற்றம்!

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை மற்றும் காசா பகுதிகளில் இஸ்ரேலியப் படையினர் முன்னெடுத்து வரும் தொடர்ச்சியான தாக்குதல்களால்...

1.1
செய்திகள்அரசியல்இலங்கை

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான விசாரணைகள் விரைவில் ஆரம்பம் – அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார உறுதி!

பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான முறைப்பாடுகளை ஆண்டின் ஆரம்பத்திலேயே விசாரிப்பதற்கான துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என...

l9920250710093646
செய்திகள்உலகம்

மெக்சிக்கோவில் சக்திவாய்ந்த நிலஅதிர்வு: 6.5 ரிக்டர் அளவில் பதிவு!

மெக்சிக்கோவின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள கெரேரோ (Guerrero) மாநிலத்தில் இன்று சக்திவாய்ந்த நிலஅதிர்வு ஒன்று ஏற்பட்டுள்ளது....