24 676b50856afea
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனாதிபதி நிதியில் பாரிய முறைகேடு: 56 அரசியல்வாதிகளுக்கு சட்டவிரோதமாக 130 மில்லியன் ரூபா வழங்கல்!

Share

ஜனாதிபதி நிதியத்திலிருந்து (President’s Fund) கடந்த காலங்களில் 56 நாடாளுமன்ற மற்றும் மாகாண சபை உறுப்பினர்களுக்குச் சட்டத்திற்குப் புறம்பாக 130 மில்லியன் ரூபாவிற்கும் அதிக தொகை மருத்துவ உதவியாக வழங்கப்பட்டுள்ளதாகத் தேசிய தணிக்கை அலுவலகம் (National Audit Office) அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.

இந்த நிதி முறைகேடுகள் 2005 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரையிலான நீண்ட காலப்பகுதியில் இடம்பெற்றுள்ளன.

விண்ணப்பப் படிவம், வருமான வரம்பு, பிரதேச செயலாளரின் உறுதிப்படுத்தல் மற்றும் மருத்துவ உதவி வரம்புகள் போன்ற எந்தவொரு அடிப்படை விதிகளையும் பின்பற்றாமல் இந்த நிதிகள் வழங்கப்பட்டுள்ளன.

முன்னாள் பிரதமர் ஒருவருக்குச் சட்ட விதிகளுக்குப் புறம்பாக சுமார் 3 கோடி ரூபாய் மருத்துவ உதவியாக வழங்கப்பட்டுள்ளது. இதில் ஒரு கோடியே 37 இலட்சம் ரூபாய் ‘மீட்பு அடிப்படையில்’ (Recovery basis) வழங்கப்பட்ட போதிலும், அந்தத் தொகை இதுவரை மீள வசூலிக்கப்படவில்லை.

கஜனாதிபதி நிதியிலிருந்து கடன் வழங்க சட்டத்தில் இடமில்லாத நிலையிலும், நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு ஒரு கோடி ரூபாவிற்கும் அதிகமான தொகை வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தொகையும் இதுவரை அரசுக்குக் கிடைக்கவில்லை.

அரச நிதியைத் தகுதியற்ற நபர்களுக்கு, குறிப்பாக மக்கள் பிரதிநிதிகளுக்குச் சட்டவிரோதமான முறையில் பகிர்ந்தளிக்கப்பட்டமை தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கத் தணிக்கை அலுவலகம் பரிந்துரைத்துள்ளது.

 

 

Share
தொடர்புடையது
30 4
உலகம்செய்திகள்

நீண்ட இடைவெளிக்குப் பின் சீனா – வடகொரியா பயணிகள் தொடருந்து சேவை நாளை மீள ஆரம்பம்!

கோவிட்-19 பெருந்தொற்று பரவல் காரணமாக கடந்த ஆறு ஆண்டுகளாக இடைநிறுத்தப்பட்டிருந்த சீனா மற்றும் வடகொரியா இடையிலான...

29 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பேலியகொட மீன் சந்தை கழிவு உரம் தயாரிப்பு: பொது சுகாதார பரிசோதகர் விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு!

பேலியகொட மெனிங் மீன் சந்தையில் எஞ்சியிருக்கும் மீன்களைப் பயன்படுத்தி தனியார் நிறுவனம் ஒன்று உரம் தயாரிக்கும்...

28 4
செய்திகள்விளையாட்டு

2026 உலகக்கோப்பை கால்பந்து தொடரிலிருந்து ஈரான் விலகல்: விளையாட்டுத்துறை அமைச்சர் அறிவிப்பு!

அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளின் கூட்டுத் தலைமையின்கீழ் நடைபெறவுள்ள 2026 உலகக்கோப்பை கால்பந்து...

27 4
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணை பதற்றம்: மசகு எண்ணெய் விலை 200 டொலரை எட்டக்கூடும் என ஈரான் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவும் தீவிர போர்ச் சூழல் மற்றும் ஹோர்முஸ் நீரிணையில் வர்த்தகக் கப்பல்கள் மீது...