செவ்வந்தியின் தொலைபேசியில் என் பெயர் எவ்வாறு சேவ் செய்யப்பட்டுள்ளது? – நாமல் ராஜபக்ச நகைச்சுவைப் பதில்!

25 68fc25278cbb0

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்தியின் தொலைபேசியில் தனது பெயர் எவ்வாறு ‘சேவ்’ (சேமிக்கப்பட்டு) செய்யப்பட்டிருக்கும் என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, அதனைப் பரிசோதித்தவர்களிடம் தான் கேட்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

“என் பெயர் பற்றி பரிசோதித்தவர்களிடம் கேளுங்கள்”: “செவ்வந்தியின் தொலைபேசியைப் பார்ப்பதற்குப் பலரும் ஆவலாக உள்ளது போல் தெரிகிறது. செவ்வந்தியின் தொலைபேசியைப் பரிசோதித்தவர்களிடம் தான் அது பற்றிக் கேட்க வேண்டும். ‘அவ்வாறானவர்கள் பரிசோதித்து எனது பெயர் எவ்வாறு உள்ளது’ எனக் கூறினால் நல்லது,” என நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

“‘மகே ராஜபக்ச’ (எனது ராஜபக்ச) என சேவ் செய்யப்பட்டதா?” என்ற கேள்விக்கு:

“சிலருக்கு தற்போது ராஜபக்சக்கள் தான் கனவில் கூட வருகின்றனர். அந்தக் கட்சியிலும் (NPP) நாமல் ஒருவர் இருக்கின்றார். அது அவரா என்பது கூடத் தெரியவில்லை. நாமல் என்ற பெயரைக் கண்டதுமே அவர்களுக்கு என்னை நினைவுக்கு வருவது சந்தோஷம்.”

“பெண்கள் தமது காதலர்களின் பெயருக்கு முன்னால் தான் ‘எனது’ என எழுதி சேவ் செய்வார்கள். சிலவேளை அது அப்படி சேவ் செய்யப்பட்ட ஒரு பெயராகக் கூட இருக்கலாம்,” என்று அவர் நகைச்சுவையாகப் பதிலளித்தார்.

Exit mobile version