1698224062 NAMAL MEDIA 6 696x487 1
செய்திகள்அரசியல்இலங்கை

அரகலயவின் பின்னணியில் வெளிநாட்டுச் சதி? – ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை கோருகிறார் நாமல் ராஜபக்ஷ!

Share

இலங்கையில் 2022-ஆம் ஆண்டு நிலவிய பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து உருவான ‘அரகலய’ (மக்களின் போராட்டம்) மற்றும் அந்தப் போராட்டத்திற்கு வெளிநாடுகளில் இருந்து கிடைத்த நிதி ஆதாரங்கள் குறித்து விசாரணை நடத்த ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) நெலும் மாவத்தையிலுள்ள கட்சி தலைமையகத்தில் நேற்று (13) ஊடகவியலாளர்களைச் சந்தித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார். நாட்டின் அரசியல் வரைபடத்தையே மாற்றியமைத்த இந்தப் போராட்டத்தின் பின்னணியில் இருந்த மறைமுக சக்திகள் மற்றும் நிதி வழங்கிய வெளிநாட்டு அமைப்புகள் எவை என்பது குறித்த உண்மைகள் நாட்டு மக்களுக்குத் தெரியப்படுத்தப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

“போராட்டத்தின் போர்வையில் தமது அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள ஒரு உயிரைப் பலிவாங்கினார்கள். இளைஞர் கூட்டமொன்றைத் தூண்டுதலுக்கு உள்ளாக்கி அவர்களைச் சட்டச் சிக்கல்களில் சிக்க வைத்தவர்கள், இன்று அதிகாரத்தில் அமர்ந்து அரசாள்கிறார்கள்” என நாமல் ராஜபக்ஷ தற்போதைய அரசாங்கத்தைத் மறைமுகமாகச் சாடினார். முறையான விசாரணை ஒன்றின் மூலமே இந்தப் போராட்டத்தின் ‘நிஜமான சூத்திரதாரிகளை’ அடையாளம் காண முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

அரகலய காலப்பகுதியில் போராட்டக்காரர்களுக்கு வழங்கப்பட்ட வசதிகள் மற்றும் அவற்றுக்குச் செலவிடப்பட்ட பெருமளவிலான பணத்தின் மூலம் வெளிநாட்டுத் தலையீடுகள் இருப்பது உறுதியாகத் தெரிவதாக அவர் சந்தேகம் வெளியிட்டார். ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றின் ஊடாக தணிக்கை மற்றும் புலனாய்வு விசாரணைகளை முன்னெடுப்பதன் மூலம் மட்டுமே இந்தப் பணப் பரிமாற்றங்களின் உண்மைத்தன்மையை நிரூபிக்க முடியும் என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...