images 3 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இந்திய சூரியசக்தித் திட்டத்திற்கு எதிராக விவசாயிகள் ஆவேசம்: கோரிக்கைகள் நிறைவேறாததால் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கொடும்பாவிகளை எரித்து போராட்டம்!

Share

தமது கோரிக்கைகள் இதுவரையில் நிறைவேற்றப்படாத நிலையில், முத்துநகர் விவசாயிகள் இன்று (நவம்பர் 20, 2025) தகரவெட்டுவான் குளத்தின் வரம்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

முத்துநகர் கிராமத்தில் பல வருடங்களாகத் தாம் மூன்று போக விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் விவசாயக் காணிகளும், குளங்களும் காணப்படுகின்றன. ஆனால், அவை இந்திய சூரியபடலத் (Solar Panel) திட்டத்தின் கீழாகக் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

விவசாயக் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும், அங்கு காணப்படும் குளங்கள் புனரமைத்துத் தரப்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

இந்தக் கோரிக்கைகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர மற்றும் ரொசான் அக்மீமன ஆகியோர் தம்மை ஏமாற்றியுள்ளதாக விவசாயிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள், நாடாளுமன்ற உறுப்பினர்களான அருண் ஹேமச்சந்திர மற்றும் ரொசான் அக்மீமன ஆகியோரின் கொடும்பாவிகளை எரித்து தமது கடுமையான எதிர்ப்பினை வெளிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
1276730 0.jpeg
செய்திகள்உலகம்

ஈரான் சிறைப்பிடித்த எண்ணெய்க் கப்பல் ‘தலாரா’ விடுவிப்பு: 21 பணியாளர்களும் பாதுகாப்பாக உள்ளனர்!

ஹாா்முஸ் நீரிணைப் பகுதியில் ஈரான் கடந்த வாரம் சிறைப்பிடித்த, மாா்ஷல் தீவுகளின் கொடியேற்றப்பட்ட ‘தலாரா’ (Talara)...

pm modi 13 20251119144744
இந்தியாசெய்திகள்

ஜி20 மாநாட்டில் பங்கேற்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தென்னாபிரிக்காவிற்குப் பயணம்!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தென்னாபிரிக்காவிற்கு விஜயம் செய்யத் தயாராகி வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன....

images 5 7
செய்திகள்பிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் சோகம்: கால் தவறி கிணற்றில் வீழ்ந்த வெளிநாட்டுப் பிரஜை உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் – ஆறுகால்மடம் பகுதியில் நபரொருவர் கால் தவறி கிணற்றுக்குள் வீழ்ந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர்...

images 4 8
இலங்கைசெய்திகள்

அரச மருத்துவமனைகளில் 150 மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு: சிகிச்சை சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்!

அரச மருத்துவமனைகளில் சுமார் 150 மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்...