கடந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டம் (பாதீடு) சிறப்பானது என்று தாம் கூறியது தவறு என்பதைத் தற்போது உணர்ந்து கொண்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
2026ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு அவர் உரையாற்றுகையில் இந்தக் கருத்தைக் குறிப்பிட்டார்.
அபிவிருத்திக்கு அதிகளவான நிதிகளை ஒதுக்கினாலும், வன விலங்குகள் மற்றும் வனப் பாதுகாப்புத் திணைக்களங்களின் மோசமான செயல்களால் திறம்பட அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ள முடியவில்லை என்று அவர் குற்றம்சாட்டினார்.
பொருளாதார நெருக்கடியிலிருந்து நாடு மேம்பட வேண்டுமாயின், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட்டால் மட்டுமே, முதலீட்டாளர்கள் நாட்டுக்குள் வருவார்கள் என்றும் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.