தேசிய மக்கள் சக்தியின் (NPP) புத்தளம் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரால், இன்று (நவ 21) பாராளுமன்ற உணவகத்தில் வைத்துத் தமக்குக் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகப் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்தார்.
தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் முஹம்மட் பைசல் என்பவரே தனக்கு இவ்வாறு கொலை மிரட்டல் விடுத்ததாக இராமநாதன் அர்ச்சுனா இன்று பாராளுமன்றத்தில் குறிப்பிட்டார்.
புத்தளம் மாவட்டத்தில் உள்ள ஒரு பிரச்சினை தொடர்பில் தான் இன்று பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பியதாகவும், அது குறித்து முஹம்மட் பைசல் ஆத்திரமடைந்து இவ்வாறு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் இராமநாதன் அர்ச்சுனா குற்றம் சாட்டினார்.
கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட இடத்தில் CCTV கெமராக்கள் இருந்ததாகவும், அவற்றைப் பயன்படுத்தி இந்தச் சம்பவம் குறித்து முறையான விசாரணையை நடத்துமாறும் அவர் பிரதி சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார்.
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையே ஏற்பட்ட இந்தக் குற்றச்சாட்டு, சபை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.