வடக்கில் விகாரை மீது தாக்குதல் நடத்த தமிழ் எம்.பி.க்கள் திட்டம்? – இராமநாதன் அர்ச்சுனா வெளியிட்ட பரபரப்பு குற்றச்சாட்டு!

Dr Archuna Ramanathan

வடக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சில தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், எதிர்வரும் ஜனவரி 3-ஆம் திகதி வடக்கில் உள்ள விகாரை ஒன்றின் மீது தாக்குதல் நடத்தி, அதன் மூலம் வகுப்புவாதக் கலவரத்தைத் தூண்டத் திட்டமிட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.

விகாரையைத் தாக்கி நாட்டில் வகுப்புவாத வன்முறையை உருவாக்குவதே சில தமிழ் அரசியல்வாதிகளின் நோக்கம் என அவர் குறிப்பிட்டுள்ளார். குறித்த உறுப்பினர்கள் தமிழ் மக்களின் மனங்களை மூளைச்சலவை செய்து, மீண்டும் பிரிவினைவாதத்தை ஊக்குவிக்க முயற்சிப்பதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இது தொடர்பான மேலதிக தகவல்களைச் சகோதர இணையதளமான ‘டெய்லி மிரர்’ (Daily Mirror) வெளியிட்டுள்ளது. வடக்கில் அமைதி நிலவி வரும் சூழலில், நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரால் முன்வைக்கப்பட்டுள்ள இத்தகைய பாரதூரமான குற்றச்சாட்டு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

Exit mobile version