17334765974
செய்திகள்இலங்கை

தாயும் மூன்று வயது மகனும் சடலமாக மீட்பு – குடும்பத் தகராறில் கொலை-தற்கொலையா என சந்தேகம்

Share

காலி – படபொல, கஹட்டபிட்டிய, பொல்லுன்னாவ பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இறந்து கிடந்த மூன்று வயது சிறுவனின் சடலமும், கயிற்றில் தொங்கிய நிலையில் ஒரு பெண்ணின் சடலமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த சடலங்கள் இன்று (27) பிற்பகல் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டதாக படபொல காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர்கள், சம்பந்தப்பட்ட வீட்டில் வசிக்கும் லகிது சம்பத் என்ற மூன்று வயது மற்றும் ஆறு மாத சிறுவன் மற்றும் சிறுவனின் தாயான இருணி நெத்யா தில்ருக்ஷி ஆகியோரே என தெரிவிக்கப்படுகிறது.

வீட்டில் கயிற்றில் தொங்கிய நிலையில் காணப்பட்ட பெண், தனது மகனை கொன்றுவிட்டு, பின்னர் தானும் உயிரை மாய்த்துக் கொண்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

உயிரிழந்த பெண் சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு வெளிநாட்டிலிருந்து இலங்கைக்குத் திரும்பியதாகவும், அவர் திருமணமானவராக இருந்தபோதிலும், தனது கணவரிடமிருந்து சட்டவிரோதமான முறையில் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், குடும்ப தகராறு காரணமாக இந்தக் கொலை மற்றும் தற்கொலை நடந்திருக்கலாம் என்றும் காவல்துறையினர் சந்தேகித்துள்ளனர்.

சம்பவம் குறித்து படபொல காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share

Recent Posts

தொடர்புடையது
25 68f4d447e68d6
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

ஊழல் வழக்குகளை விரைவுபடுத்த: சம்பந்தன் உள்ளிட்ட முக்கிய நபர்களின் உத்தியோகபூர்வ இல்லங்கள் மேல் நீதிமன்றங்களாக மாற்றம்!

ஊழல் எதிர்ப்பு தேசிய செயல் திட்டத்தை (2025–2029) வலுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, கொழும்பு 7...

images 2 4
பிராந்தியம்இலங்கைசெய்திகள்

பொத்துவில் முஹுது மஹா விகாரைக்கு இந்திய உயர்ஸ்தானிகர் விஜயம்: தொல்லியல் இடங்களைப் பாதுகாக்க கோரிக்கை

பொத்துவில் பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க முஹுது மஹா விகாரையை இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா...

25 68ff93f31cee3
செய்திகள்இலங்கை

வெலிகம துப்பாக்கிச் சூடு: கைதானவர் குறித்த காணொளி பதிவு – காவல்துறை அதிகாரிகள் மீது சிறப்பு விசாரணை ஆரம்பம்

வெலிகம பிரதேச சபைத் தலைவர் மீதான துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட சந்தேக...

25 68ef777f06ff0
இலங்கைசெய்திகள்

அவிசாவளை நீதிமன்றத்தில் போலித் துப்பாக்கியுடன் நுழைய முயன்ற பெண் கைது: விளக்கமறியலில் உத்தரவு

போலித் துப்பாக்கி ஒன்றை வைத்திருந்த நிலையில், அவிசாவளை நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைய முயன்ற பெண் ஒருவரைப்...