மொரட்டுவ பாடசாலை மாணவர் துஷ்பிரயோகம்: ஆசிரியர் விளக்கமறியலில்; சம்பவத்தை மறைத்த அதிபர் பிணையில் விடுதலை!

MediaFile 13

மொரட்டுவப் பகுதியில் உள்ள ஒரு பிரபலமான பாடசாலையைச் சேர்ந்த 14 வயது மாணவரைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆசிரியரை, எதிர்வரும் டிசம்பர் 01ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மொரட்டுவ நீதவான் இன்று (நவம்பர் 18) உத்தரவிட்டுள்ளார்.

மொரட்டுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாடசாலையின் போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பொறுப்பு ஆசிரியராகப் பணியாற்றிய, பதுரலிய பகுதியைச் சேர்ந்த 58 வயதுடைய இவர், மாணவரைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். இவருக்கு எதிராக மேலும் பல முறைப்பாடுகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

நீதவான் அவரை டிசம்பர் 01ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

இந்தச் சம்பவத்தை மறைத்ததாகச் சந்தேகத்தின் பேரில், பிலியந்தலை பகுதியைச் சேர்ந்த 59 வயதுடைய பாடசாலை அதிபரும் அண்மையில் மொரட்டுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

அதிபரைத் தலா இரண்டு இலட்சம் ரூபாய் பெறுமதியான 2 சரீரப் பிணைகளில் செல்ல நீதவான் உத்தரவிட்டதாகச் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version