இந்தியாசெய்திகள்

நிலவை ‘இந்து நாடாக’ அறிவிக்க வேண்டும்! இந்திய பிரதமருக்கு வேண்டுகோள்

Share

நிலவை ‘இந்து நாடாக’ அறிவிக்க வேண்டும்! இந்திய பிரதமருக்கு வேண்டுகோள்

நிலவை இந்து ராஷ்டிராவாக அறிவிக்க வேண்டும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அகில இந்திய இந்து மகாசபை தலைவர் சுவாமி சக்கரபாணி வேண்டுகோள் விடுத்துள்ளார்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ, நிலவின் தென்துருவ பகுதியை ஆய்வு செய்வதற்கு சந்திரயான் 3 விண்கலத்தை வடிவமைத்து, எல்.வி.எம்.3 எம்-4 என்ற ராக்கெட் மூலம் கடந்த மாதம் 14 ஆம் திகதி விண்ணில் செலுத்தியது.

அதன்படி, கடந்த 23-ம் தேதி மாலை 6.04 மணிக்கு மாலை சந்திரயான்-3 விண்கத்தின் லேண்டர் பாகம் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது. பின்னர், சில மணி நேரங்களுக்கு அடுத்து லேண்டரில் இருந்த ரோவர் வாகனமும் நிலவில் தரையிறங்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, இந்திய பிரதமர் நரேந்திர மோடி சந்திரயான் 3 விண்கலத்தின் லேண்டர் தரையிறங்கிய இடத்திற்கு ‘சிவசக்தி’ என்ற பெயர் வைத்தார்.

இந்நிலையில் நிலவை இந்து ராஷ்டிராவாக அறிவிக்க வேண்டும் என்று அகில இந்திய இந்து மகாசபை தலைவர் சுவாமி சக்கரபாணி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக வீடியோ வெளியிட்ட அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,”நிலவை இந்து ராஷ்டிராவாக நாடாளுமன்றத்தில் அறிவிக்க வேண்டும். சந்திரயான் 3 விண்கலம் நிலவில் தரையிறங்கிய ‘சிவசக்தி பாயிண்டை’ அதன் தலைநகராக அறிவிக்க வேண்டும்.

எந்தப் பயங்கரவாதிகளும் அந்த இடத்திற்கு செல்லமுடியாதபடி இந்திய அரசு விரைவாகச் செயல்பட வேண்டும்” என்று கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....