இந்தியாசெய்திகள்

நிலவை ‘இந்து நாடாக’ அறிவிக்க வேண்டும்! இந்திய பிரதமருக்கு வேண்டுகோள்

Share

நிலவை ‘இந்து நாடாக’ அறிவிக்க வேண்டும்! இந்திய பிரதமருக்கு வேண்டுகோள்

நிலவை இந்து ராஷ்டிராவாக அறிவிக்க வேண்டும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அகில இந்திய இந்து மகாசபை தலைவர் சுவாமி சக்கரபாணி வேண்டுகோள் விடுத்துள்ளார்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ, நிலவின் தென்துருவ பகுதியை ஆய்வு செய்வதற்கு சந்திரயான் 3 விண்கலத்தை வடிவமைத்து, எல்.வி.எம்.3 எம்-4 என்ற ராக்கெட் மூலம் கடந்த மாதம் 14 ஆம் திகதி விண்ணில் செலுத்தியது.

அதன்படி, கடந்த 23-ம் தேதி மாலை 6.04 மணிக்கு மாலை சந்திரயான்-3 விண்கத்தின் லேண்டர் பாகம் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது. பின்னர், சில மணி நேரங்களுக்கு அடுத்து லேண்டரில் இருந்த ரோவர் வாகனமும் நிலவில் தரையிறங்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, இந்திய பிரதமர் நரேந்திர மோடி சந்திரயான் 3 விண்கலத்தின் லேண்டர் தரையிறங்கிய இடத்திற்கு ‘சிவசக்தி’ என்ற பெயர் வைத்தார்.

இந்நிலையில் நிலவை இந்து ராஷ்டிராவாக அறிவிக்க வேண்டும் என்று அகில இந்திய இந்து மகாசபை தலைவர் சுவாமி சக்கரபாணி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக வீடியோ வெளியிட்ட அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,”நிலவை இந்து ராஷ்டிராவாக நாடாளுமன்றத்தில் அறிவிக்க வேண்டும். சந்திரயான் 3 விண்கலம் நிலவில் தரையிறங்கிய ‘சிவசக்தி பாயிண்டை’ அதன் தலைநகராக அறிவிக்க வேண்டும்.

எந்தப் பயங்கரவாதிகளும் அந்த இடத்திற்கு செல்லமுடியாதபடி இந்திய அரசு விரைவாகச் செயல்பட வேண்டும்” என்று கூறியுள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
images 3 1
உலகம்செய்திகள்

ஜெர்மனியில் அதிர்ச்சி: மருத்துவமனையில் பணிச்சுமை காரணமாக 10 நோயாளிகளைக் கொலை செய்த ஆண் தாதிக்கு ஆயுள் தண்டனை!

ஜெர்மனியில் உள்ள ஊர்செலன் (Ürselen) நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில், 2020ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த...

images 4 1
செய்திகள்இந்தியா

தமிழ்நாடு இலங்கைத் தமிழர்களுக்கு உடனடியாக வாக்களிக்கும் உரிமை மற்றும் குடியுரிமை வழங்கு: மத்திய அரசுக்கு எஸ். ராமதாஸ் வலியுறுத்தல்!

தமிழ்நாட்டில் பல தசாப்தங்களாக வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழ் ஏதிலிகளுக்கு (Refugees) வாக்களிக்கும் உரிமை மற்றும்...

25 6909cc0a3b1bf
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சங்குப்பிட்டி கொலை: பிரதான சந்தேகநபர் தவில் வித்துவான் அல்ல – இசை வேளாளர் இளைஞர் பேரவை விளக்கம்!

பூநகரி – சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்துடன் கைது செய்யப்பட்ட பிரதான...

25 690c956ec39eb
இலங்கைசெய்திகள்

திருகோணமலை கண் பரிசோதனை நிலையத்தில் தீ விபத்து: மின் ஒழுக்கு காரணமெனத் தகவல்!

திருகோணமலைத் துறைமுகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, திருகோணமலை பொது வைத்தியசாலையின் அருகாமையில் உள்ள ஒரு தனியார் கண்...