24 660a5a4ef10ec
இந்தியாசெய்திகள்

பதில் சொல்லுங்கள் மோடி: முக ஸ்டாலின் 3 கேள்விகள்

Share

பதில் சொல்லுங்கள் மோடி: முக ஸ்டாலின் 3 கேள்விகள்

கச்சத்தீவு விவகாரத்தை வைத்து பாஜக-வினர் பலரும் திமுக- காங்கிரஸ் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் நிலையில், பிரதமர் மோடியிடம் மூன்று முக்கிய கேள்விகளை கேட்டுள்ளார் தமிழக முதல்வர் முக ஸ்டாலின்.

இன்று காலை X தளத்தில் பிரதமர் மோடி, கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்தது தொடர்பாக வரும் தகவல்கள் திமுக-வின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்துகிறது.

தமிழக மக்களின் நலனுக்காக திமுக எதுவுமே செய்யவில்லை என்பது இதன் மூலம் புலப்படுகிறது.

காங்கிரசும் சரி, திமுக-வும் சரி தங்களது குடும்பம் முன்னேற வேண்டும் என்று மட்டுமே நினைக்கின்றனர்.

கச்சத்தீவு விவகாரத்தால் ஏழை மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என பதிவிட்டிருந்தார்.

இதற்கு பதிலடி வழங்கும் விதமாகவும், மற்ற பாஜக-வினர் கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாகவும் முதல்வர் முக ஸ்டாலின் மூன்று கேள்விகளை கேட்டுள்ளார்.

அதாவது,

“பத்தாண்டுகளாகக் கும்பகர்ணத் தூக்கத்தில் இருந்துவிட்டு, தேர்தலுக்காகத் திடீர் மீனவர் பாச நாடகத்தை அரங்கேற்றுபவர்களிடம் தமிழ்நாட்டு மக்கள் கேட்கும் கேள்வி மூன்றுதான்.

1. தமிழ்நாடு ஒரு ரூபாய் வரியாகத் தந்தால், ஒன்றிய அரசு 29 பைசா மட்டுமே திருப்பித் தருவது ஏன்

2. இரண்டு இயற்கைப் பேரிடர்களை அடுத்தடுத்து எதிர்கொண்டபோதும், தமிழ்நாட்டுக்கு ஒரு ரூபாய் கூட வெள்ள நிவாரணம் வழங்காதது ஏன்?

3. பத்தாண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் தமிழ்நாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட சிறப்புத் திட்டம் என ஒன்றாவது உண்டா? திசைதிருப்பல்களில் ஈடுபடாமல், இதற்கெல்லாம் விடையளியுங்கள் பிரதமர் அவர்களே…” எனப் பதிவிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
MediaFile 7 1
உலகம்செய்திகள்

வடக்கு ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : இவாட் கடற்கரைக்கு சுனாமி எச்சரிக்கை – ஒரு மீற்றர் அலைகள் உருவாகலாம்!

வடக்கு ஜப்பானின் கடற்பரப்பில் இன்று (நவம்பர் 9) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கப் புவியியல் ஆய்வு...

1618851994 heroin boat
செய்திகள்இலங்கை

சீனிகம ஹெரோயின் கடத்தல் வழக்கு: மேலும் மூவர் கைது; 5.4 கிலோ ஹெரோயினும், 10.8 மில்லியன் ரூபா பணமும் பறிமுதல்!

சீனிகமப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், மேலும் மூன்று...

25 690f41c5a622b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: யாழ்ப்பாணம் மானிப்பாயில் பெண் உட்பட 3 சந்தேகநபர்கள் கைது!

கொழும்பு – கொட்டாஞ்சேனைப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில்,...

25 6906f19b49c03
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பொலனறுவை வெலிகந்தையில் சோகம்: டிரக்டர் மோதி வீதியைக் கடந்த 8 வயது சிறுவன் பலி!

பொலனறுவை, வெலிகந்த – அசேலபுரப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இரவு இடம்பெற்ற வீதி விபத்து...