Map of Delft Island
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நெடுந்தீவில் பின்வாங்கிய வன பாதுகாப்பு அமைச்சு!!!

Share

நெடுந்தீவில் சுமார் 1200 ஹெக்டேயர் நிலப்பரப்பை வன, விலங்கு பாதுகாப்பு சரணாலயம் அமைப்பதிலிருந்து விடுவித்து வன ஜீவராசிகள், வன பாதுகாப்பு அமைச்சு வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

வன ஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சு கடந்த 2015 ஜூன் 22 ஆம் திகதியன்று நெடுந்தீவில் 1728.11 ஹெக்டேயர் நிலப்பகுதியை வர்த்தமானி அறிவித்தல் மூலம் வன,விலங்கு பாதுகாப்பு சரணாலயமாக அறிவித்திருந்தது.

இவ்வர்த்தமானி அறிவித்தல் ஊடாக அறிவிக்கப்பட்ட நிலப் பகுதியில் பெருமளவான பகுதியை விடுவிக்குமாறு வன ஜீவராசிகள், வன பாதுகாப்பு அமைச்சின் வட மாகாண பணிப்பாளர் மா.பரமேஸ்வரன் வன ஜீவராசிகள், வன பாதுகாப்பு அமைச்சர் சி.பி.ரட்னாயக்காவிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதையடுத்து அமைச்சரின் உத்தரவுக்கு அமைய அமைச்சின் செயலாளர் எம்.கே.பந்துல ஹரிச்சந்திர வன,விலங்கு பாதுகாப்பு சரணாலமாக அறிவிக்கப்பட்ட பகுதியிலிருந்து 537 ஹெக்டேயர் தவிர 1191.11 ஹெக்டேயரை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி குறித்த பகுதியை விடுவிப்பதற்கான நடவடிக்கை யாழ்.மாவட்ட செயலக மட்டத்தில் இடம்பெற்று வருவதாக மாவட்ட செயலக வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

எனினும் பெருந்தோட்ட இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோ வடக்கின் தென்னை முக்கோண வலயமாக்கும் செயற்றிட்டத்தின் கீழ் முதலாவதாக நெடுந்தீவில் பாரிய தென்னை பயிற்செய்கை மேற்கொள்ள முன்மொழிந்துள்ளார்.

இதன் மூலம் 2000 மில்லியன் ரூபா வருமானத்தை நாட்டின் தேசிய உற்பத்திக்கு பெற்றுக் கொடுக்க முடியுமென்பதுடன் தொழில் வாய்ப்பு மற்றும் வறுமை ஒழிப்புக்கு உதவுமென எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தென்னை செய்கை தனியார், பொது மக்கள் பங்குடமை தொழில் திட்டமாக முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளதாகவும் இதன் மூலம் நெடுந்தீவில் பயன்பாடற்றிருக்கும் நிலப்பகுதி பயன்படுத்தப்படுவதன் மூலம் உல்லாச துறைக்கும் வலுசேர்க்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

#SrilankaNews

 

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
1618851994 heroin boat
செய்திகள்இலங்கை

சீனிகம ஹெரோயின் கடத்தல் வழக்கு: மேலும் மூவர் கைது; 5.4 கிலோ ஹெரோயினும், 10.8 மில்லியன் ரூபா பணமும் பறிமுதல்!

சீனிகமப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், மேலும் மூன்று...

25 690f41c5a622b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: யாழ்ப்பாணம் மானிப்பாயில் பெண் உட்பட 3 சந்தேகநபர்கள் கைது!

கொழும்பு – கொட்டாஞ்சேனைப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில்,...

25 6906f19b49c03
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பொலனறுவை வெலிகந்தையில் சோகம்: டிரக்டர் மோதி வீதியைக் கடந்த 8 வயது சிறுவன் பலி!

பொலனறுவை, வெலிகந்த – அசேலபுரப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இரவு இடம்பெற்ற வீதி விபத்து...

image b8b525779a
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி: இஸ்தான்புல் பேச்சுவார்த்தை உடன்பாடின்றி முறிந்தது – அவநம்பிக்கை அதிகரிப்பு!

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடந்து வந்த பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையேயான அமைதிப்...