1 15 scaled
இந்தியாசெய்திகள்

சட்டமன்றத்தில் அமர்ந்திருக்கும் இடத்திலேயே எச்சிலை துப்பும் தமிழக அமைச்சர்

Share

சட்டமன்றத்தில் அமர்ந்திருக்கும் இடத்திலேயே எச்சிலை துப்பும் தமிழக அமைச்சர்

தமிழக சட்டமன்றத்தில் அமர்ந்திருக்கும் இடத்தின் கீழேயே எச்சிலை துப்பும் அமைச்சர் ராஜகண்ணப்பனின் வீடியோ பரவி வருகிறது.

கடந்த 20 -ம் திகதி கூடிய தமிழக சட்டமன்றத்தில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடந்து வருகின்றன. இரு வேளைகளும் பல்வேறு துறை மீதான விவாதம் நடத்தப்படுகின்றன.

இந்நிலையில், அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் கள்ளக்குறிச்சி விவகாரத்தை கண்டித்து கருப்பு சட்டை அணிந்து வந்து அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்து வருகின்றனர்.

இதனிடையே, அமைச்சர் ராஜகண்ணப்பன் சாதிவாரி குறித்து பேசிய கருத்துக்களும் சர்ச்சையானது. அப்போது, சபாநாயகர் அவரை கடுமையாக விசாரித்தார். அமைச்சர்கள் பேசும்போது கவனமாக பேசுங்கள் எனவும் அறிவுறுத்தினார்.

இந்நிலையில், நேற்று சட்டமன்றத்தில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பின்னால் உள்ள இருக்கையில் அமைச்சர் ராஜகண்ணப்பன் அமர்ந்திருந்தார்.

அமைச்சர் ராஜகண்ணப்பன் தான் அமர்ந்திருக்கும் இடத்தின் கீழேயே எச்சிலை துப்புகிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களை கூறி கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Share
தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...