இந்தியாசெய்திகள்

சட்டமன்றத்தில் அமர்ந்திருக்கும் இடத்திலேயே எச்சிலை துப்பும் தமிழக அமைச்சர்

Share
1 15 scaled
Share

சட்டமன்றத்தில் அமர்ந்திருக்கும் இடத்திலேயே எச்சிலை துப்பும் தமிழக அமைச்சர்

தமிழக சட்டமன்றத்தில் அமர்ந்திருக்கும் இடத்தின் கீழேயே எச்சிலை துப்பும் அமைச்சர் ராஜகண்ணப்பனின் வீடியோ பரவி வருகிறது.

கடந்த 20 -ம் திகதி கூடிய தமிழக சட்டமன்றத்தில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடந்து வருகின்றன. இரு வேளைகளும் பல்வேறு துறை மீதான விவாதம் நடத்தப்படுகின்றன.

இந்நிலையில், அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் கள்ளக்குறிச்சி விவகாரத்தை கண்டித்து கருப்பு சட்டை அணிந்து வந்து அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்து வருகின்றனர்.

இதனிடையே, அமைச்சர் ராஜகண்ணப்பன் சாதிவாரி குறித்து பேசிய கருத்துக்களும் சர்ச்சையானது. அப்போது, சபாநாயகர் அவரை கடுமையாக விசாரித்தார். அமைச்சர்கள் பேசும்போது கவனமாக பேசுங்கள் எனவும் அறிவுறுத்தினார்.

இந்நிலையில், நேற்று சட்டமன்றத்தில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பின்னால் உள்ள இருக்கையில் அமைச்சர் ராஜகண்ணப்பன் அமர்ந்திருந்தார்.

அமைச்சர் ராஜகண்ணப்பன் தான் அமர்ந்திருக்கும் இடத்தின் கீழேயே எச்சிலை துப்புகிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களை கூறி கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Share
Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...