Ilankumaran
செய்திகள்இலங்கை

யாழில் மீற்றர் வட்டி மாஃபியாவுக்கு எதிராக மக்கள் தகவல் தரலாம்: நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் கோரிக்கை!

Share

யாழ்ப்பாணத்தில் அதிகரித்து வரும் மீற்றர் வட்டி மாஃபியாவுக்கு எதிராக மக்கள் தமக்குத் தகவல்களை வழங்கலாம் எனத் தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தெரிவித்துள்ளார்.

அவர் தனது முகநூல் (Facebook) பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டு இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.

மக்களிடம் அதிகமான காசோலைகளைப் பெற்றுக் கொண்டு, அதை அடிப்படையாகக் கொண்டு மிரட்டி அல்லது சொத்துக்களை இழக்கச் செய்தவர்களும் தம்முடன் தொடர்பு கொள்ளலாம் என அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, யாழ்ப்பாணத்தில் பணத்திற்காக வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடுபவர்கள், போதைப்பொருள் கடத்தல்களில் ஈடுபடுபவர்கள், வட்டிக்குப் பணம் வழங்கியவர்கள் தொடர்பில் யாழ்ப்பாணக் குற்றத்தடுப்புப் பிரிவினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

முதல் கட்டமாக 08 பேருக்கு எதிராக விசாரணைகளை ஆரம்பித்துள்ள காவல்துறையினர், அவர்களில் ஐவருக்கு எதிராக யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றிலும், மூவருக்கு எதிராக மல்லாகம் நீதவான் நீதிமன்றிலும் வழக்குகள் தொடரப்படவுள்ளன.

மேலும், யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதச் செயற்பாடுகளின் தீவிரத்தைக் குறைக்க அவசர நடவடிக்கை எடுக்குமாறு பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆலோசனைக் குழுவுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் விற்பனையிலிருந்து பெறப்படும் பணம், சமூக விரோதச் செயற்பாடுகளுக்குப் பயன்படுத்தப்படுவதுடன், மீட்டர் வட்டி வணிகம், ஆள் கடத்தல், கட்டப்பஞ்சாயத்து, குழுச் சண்டைகள் போன்ற குற்றச் செயல்களிலும் சிலர் ஈடுபட்டு வருகின்றனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
20 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நீண்ட வார இறுதி விடுமுறை: நுவரெலியாவில் சுற்றுலாப் பயணிகள் குவிந்ததால் ஹோட்டல்கள் அனைத்தும் ஹவுஸ்புல்!

நீண்ட வார இறுதி விடுமுறையைக் கழிக்க உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பெருமளவில் நுவரெலியாவிற்கு...

18 1
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கில் விமான நிலையங்கள் மூடல்: பிரித்தானிய குடிமக்களை வெளியேற்ற பாரிய திட்டம்!

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ளதால், மத்திய கிழக்கில் உள்ள பல முக்கிய விமான நிலையங்கள்...

17 1
உலகம்செய்திகள்

லெபனானில் போர் பதற்றம்: அமெரிக்க குடிமக்களை உடனடியாக வெளியேறுமாறு தூதரகம் அவசர அழைப்பு!

லெபனானின் பாதுகாப்புச் சூழல் மிகவும் நிலையற்றதாகவும், கணிக்க முடியாததாகவும் மாறியுள்ளதால், அங்கு தங்கியுள்ள அமெரிக்க குடிமக்கள்...

15 1
செய்திகள்உலகம்

ஈரான் அதியுயர் தலைவர் காமேனியின் மனைவியும் உயிரிழப்பு: குடும்பத்தையே அழித்த அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதல்!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் இணைந்து ஈரானின் அதியுயர் தலைவர் அயத்துல்லா அலி காமேனியை இலக்கு...