images 3 1
செய்திகள்இலங்கை

மோசடிகளைத் தடுக்க ‘மெட்டா’வின் புதிய பாதுகாப்பு அம்சங்கள்: வாட்ஸ்அப், ஃபேஸ்புக்கில் ஏ.ஐ. எச்சரிக்கை அறிமுகம்!

Share

சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி மக்களிடம் பண மோசடியில் ஈடுபடும் சம்பவங்கள் உலகளாவிய ரீதியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இவற்றைத் தடுக்கும் நோக்கில், ‘மெட்டா’ (Meta) நிறுவனம் தங்கள் ‘வாட்ஸ்அப்’ (WhatsApp) மற்றும் ‘பேஸ்புக்’ (Facebook) தளங்களில், புதிய மோசடி தடுப்புக்கான பாதுகாப்பு அம்சங்களையும் விழிப்புணர்வு முயற்சிகளையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

சமூக ஊடகங்களில் பகுதிநேர வேலை வாய்ப்புகள், சலுகை விலையில் பொருட்கள், முதலீட்டு வாய்ப்புகள், ‘டிஜிட்டல்’ கைது போன்ற பல வழிகளில் பொதுமக்களை மோசடி செய்து பணம் பறிக்கும் செயல்கள் நடந்து வருகின்றன. இந்த மோசடிகள் பெரும்பாலும் ‘வாட்ஸ்அப்’ மற்றும் ‘பேஸ்புக்’ தளங்கள் மூலம் நடைபெறுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

பேஸ்புக் மெசஞ்சர்: ‘பேஸ்புக் மெசஞ்சரில்’ செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான மோசடியைக் கண்டறியும் அமைப்பு அறிமுகமாக உள்ளது. இந்தக் குறித்த அமைப்பு, புதிய தொடர்பில் இருந்து வரும் குறுந்தகவல்கள் தொடர்பில் பயனர்களுக்கு எச்சரிக்கை வழங்கும் எனக் கூறப்படுகிறது.

வாட்ஸ்அப்: ‘வாட்ஸ்அப்பில்’ அறிமுகம் இல்லாத நபர்களுடன் காணொளி உரையாடலில் ஈடுபடும் போது, தொலைபேசித் திரையைப் பகிரும் பயனர்களுக்கு எச்சரிக்கை செய்தி காட்டப்படும் எனக் குறிப்பிடப்படுகிறது. ஏனெனில், இது இணைய மோசடி கும்பல் வங்கி விபரங்கள் அல்லது ஒரு தடவை மாத்திரம் பயன்படுத்தும் கடவுச்சொல் எண்களைத் திருடப் பயன்படுத்தும் பொதுவான வழிமுறையாகும்.

இந்த புதிய பாதுகாப்பு அம்சங்கள், பயனர்களை நிதி மோசடிகளில் இருந்து பாதுகாக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
image 1200x800 14 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அக்குரேகொட கொலை வழக்கு: சந்தேகநபர்களுக்குத் தடுப்புக்காவல்! – நூற்றுக்கணக்கான சட்டத்தரணிகள் நீதிமன்றில் திரண்டனர்!

சட்டத்தரணி புத்திக மல்லவஆராச்சி மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட...

images 1 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஜிந்துபிட்டி துப்பாக்கிச் சூடு: இரு பொலிஸ் அதிகாரிகள் கைது! – தலைமையகம் அதிரடி நடவடிக்கை!

கொழும்பு, ஜிந்துபிட்டி பகுதியில் கடந்த சனிக்கிழமை (14) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் போது, தமது...

image 1200x800 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சீகிரியாவில் சோகம்: காட்டு யானை தாக்கியதில் ஹங்கேரி நாட்டுச் சுற்றுலாப் பயணி பலி!

இலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றுலாத் தலமான சீகிரியா மற்றும் பிதுரங்கலை மலைக்கு இடைப்பட்ட காட்டுப்பகுதியில், காட்டு...

image 1200x800 35
செய்திகள்இலங்கை

ஓய்வுக்காலத்தின் சொர்க்கபுரி இலங்கை! – 2026-இல் உலகின் மிக மலிவான நாடாக முதலிடம்; ‘Travel + Leisure’ புகழாரம்!

உலகின் முன்னணி பயண மற்றும் வாழ்க்கைமுறை சஞ்சிகையான ‘Travel + Leisure’, 2026-ஆம் ஆண்டில் ஓய்வுபெற்ற...