images 20
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மாவனெல்லை கோர விபத்து: லொறியின் பிரேக் செயலிழந்ததே காரணம்! நேரடி சாட்சியம்.

Share

கொழும்பு – கண்டி பிரதான வீதியின் மாவனெல்லை, பல்பாத பகுதியில் இன்று மாலை 3.30 மணியளவில் இடம்பெற்ற விபத்து குறித்த மேலதிக மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட விபரங்கள் வெளியாகியுள்ளன.

கண்டியிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த லொறி ஒன்றின் பிரேக் (Brake failure) திடீரென செயலிழந்துள்ளது. இதனால் உதுவன்கந்தை இறக்கத்தில் கட்டுப்பாட்டை இழந்த லொறி, அதிவேகத்தில் முன்னால் சென்ற வாகனங்களை மோதித் தள்ளியுள்ளது:

முதலில், பூண்டுலோயாவிலிருந்து கொழும்பு சென்ற இலங்கை போக்குவரத்துச் சபை (SLTB) பேருந்தின் பின்புறத்தில் லொறி மோதியது.

மோதிய வேகத்தில் இ.போ.ச பேருந்து, தனக்கு முன்னால் சென்ற தனியார் பேருந்தை மோதிவிட்டு ஒரு மதகில் மோதி நின்றது.

லொறி மற்றும் இ.போ.ச பேருந்து மோதிய வேகத்தில் தள்ளப்பட்ட தனியார் பேருந்து, அருகில் இருந்த வயலுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

விபத்தை ஏற்படுத்திய லொறியின் உதவியாளர் (Assistant) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். லொறியில் பயணித்த மற்றொரு நபர் மற்றும் இரண்டு பேருந்துகளிலும் இருந்த பயணிகள் காயமடைந்து கேகாலை மற்றும் மாவனெல்லை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பேருந்துக்குள் சுமார் 60 பயணிகள் இருந்தனர். முன்னால் சென்ற பேருந்துக்காக நான் வேகத்தைக் குறைத்தேன். அந்தச் சமயம் ‘தடார்’ எனப் பலத்த சத்தம். ஏதோ ஒன்று ஜெட் விமானம் போல எல்லாவற்றையும் தள்ளிக்கொண்டு சென்றது. என்ன நடந்தது என்று நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை.

இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் நீண்ட நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன், மாவனெல்லை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

 

Share
தொடர்புடையது
sri lankan buddhist monks participate all night 440nw 10583135b
செய்திகள்இலங்கை

தேரர்களை இழிவுபடுத்த வேண்டாம்: சைபர் தாக்குதல்களுக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு!

மிஹிந்தலை ரஜமஹா விகாராதிபதி உள்ளிட்ட மகா சங்கத்தினரை இழிவுபடுத்தும் நோக்கில் சமூக வலைதளங்கள் வாயிலாக முன்னெடுக்கப்படும்...

26 69648efcbd42c
செய்திகள்அரசியல்இலங்கை

பாதுகாப்புத் தரப்பிடம் மண்டியிட்டதா அநுர அரசாங்கம்?: புதிய பயங்கரவாத சட்ட வரைவுக்கு சுமந்திரன் கடும் எதிர்ப்பு!

தற்போதைய அரசாங்கம் கொண்டுவரவுள்ள ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்’ (PSTA) எனும் புதிய சட்ட வரைவானது,...

download 1
செய்திகள்இலங்கை

பத்தரமுல்லையில் கார்களை வாளால் தாக்கிய இளைஞர்: ஜனவரி 22 வரை விளக்கமறியல்!

பத்தரமுல்ல – தியத உயன மற்றும் எத்துல் கோட்டை பிரதான வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்றவாறு,...

images 9 2
செய்திகள்அரசியல்இலங்கை

விடைபெறும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் சந்திப்பு!

இலங்கைக்கான தனது இராஜதந்திரப் பணிகளை நிறைவு செய்து கொண்டு நாடு திரும்பவுள்ள அமெரிக்கத் தூதுவர் ஜூலி...