MediaFile 4 5
செய்திகள்அரசியல்இலங்கை

மத்துகம பிரதேச சபை தவிசாளர் சரணடைவு: நீதிமன்றினால் பிணை வழங்கப்பட்டது!

Share

மத்துகம பிரதேச சபை செயலாளரைத் தாக்கியதாகக் குற்றம் சுமத்தப்பட்டிருந்த அந்த சபையின் தவிசாளர் கசுன் முனசிங்க, இன்று பொலிஸில் சரணடைந்ததைத் தொடர்ந்து நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

மத்துகம பிரதேச சபை செயலாளர் நெலு நிஷாந்தி இத்தகொட, தவிசாளர் தன்னைத் தாக்கியதாகவும் அச்சுறுத்தல் விடுத்ததாகவும் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.

காயமடைந்த செயலாளர் மத்துகம வெத்தேவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்றார். நேற்று பொலிஸார் தவிசாளரைக் கைது செய்யச் சென்றபோது, அவர் சபை வளாகத்திலிருந்து வெளியேறித் தலைமறைவாகியிருந்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் கீழ் உள்ள மத்துகம பிரதேச சபையின் தவிசாளர் கசுன் முனசிங்க, இன்று (31) முற்பகல் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் சரணடைந்தார்.

இதனைத் தொடர்ந்து அவர் மத்துகம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது. தலா 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் அவரை விடுவிக்கப் பதில் நீதவான் உத்தரவிட்டார்.

இந்தச் சம்பவம் மத்துகம பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், உள்ளூராட்சி சபைகளின் நிர்வாகச் செயல்பாடுகளுக்கிடையே நிலவும் மோதல்களை வெளிப்படுத்தியுள்ளது.

 

 

Share
தொடர்புடையது
images 9 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சாவகச்சேரியில் குரங்குத் தொல்லையை ஒழிக்க 20 கமக்காரர்களுக்கு இறப்பர் துப்பாக்கிகள் வழங்கல்!

யாழ்ப்பாணம், சாவகச்சேரி – தென்மராட்சி பிரதேசத்தில் விவசாயிகளுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் குரங்குத் தொல்லையைக்...

4JVJ5DK AFP 20251227 89488ZV v2 HighRes FilesYemenConflictProtestUaeSaudi jpg
செய்திகள்உலகம்

ஏமனிலிருந்து படைகளைத் திரும்பப் பெறுகிறது ஐக்கிய அரபு அமீரகம்: சவுதி – அபுதாபி விரிசல் பின்னணியா?

ஏமன் நாட்டில் பல ஆண்டுகளாக நிலைநிறுத்தப்பட்டிருந்த தனது படைகளைத் திரும்பப் பெறுவதாக ஐக்கிய அரபு அமீரகம்...

image baba9371d9
செய்திகள்அரசியல்இலங்கை

துப்பாக்கி அனுமதிப்பத்திரங்களைப் புதுப்பிக்க மேலதிக அவகாசம்: ஜனவரி 31 வரை நீடிப்பு!

துப்பாக்கி அனுமதிப்பத்திரங்களை (Firearm Licenses) புதுப்பிப்பதற்காக வழங்கப்பட்டிருந்த கால அவகாசத்தை மேலும் ஒரு மாதத்தினால் நீடிக்கப்...

Foreign Ministry
செய்திகள்இலங்கை

ஐக்கிய அரபு இராச்சியத்தில் 3 ஆண்டு காலத் தவிப்பு: இலங்கைப் பெண்ணை மீட்க வெளிவிவகார அமைச்சு நேரடித் தலையீடு!

ஐக்கிய அரபு இராச்சியத்தில் (UAE) தனது குழந்தையுடன் நாடு திரும்ப முடியாமல் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாகச்...