Manivannan 1
செய்திகள்இலங்கை

வலிதென்மேற்கு உறுப்பினர் தாக்கப்பட்டமைக்கு மணிவண்ணன் கண்டனம்!!

Share

வலி தென்மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர் ஜிப்ரிக்கோ இளவாலை பொலிசாரினால் தாக்கப்பட்டமைக்கு எதிராக யாழ் மாநகர முதல்வர் தனது கண்டனத்தை பதிவுசெய்துள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

வலி தென்மேற்கு பிரதேச சபை உறுப்பினர் ஜோன் ஜிப்ரிக்கோ அவர்கள் பொலிஸாரினால் கடுமையாக தாக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

எந்த ஒரு கடுமையான குற்றத்தை செய்த ஒருவருக்கு கூட தாக்குவதற்கான அதிகாரம் போலீசாருக்கு இல்லை. இதுவே இலங்கையின் சட்ட ஏற்பாடாக இருக்கின்றது .

ஆனால் பொதுமக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதி ஒருவரை இவ்வாறு மூர்க்கத்தனமாக இளவாலை போலீசார் தாக்கியிருப்பது ஏற்றுக்கொள்ளப்பட முடியாத ஒரு செயல் மிகவும் கண்டிக்கப்பட வேண்டிய ஒரு செயல்.

இதற்கு எனது வன்மையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கின்றேன். இந்த சம்பவத்துடன் தொடர்புபட்ட அனைத்து போலீசார் மீதும் மிக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் .

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மீதும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் .அத்தோடு இந்த சம்பவத்துடன் தொடர்புபட்ட அனைத்து பொலிசாரும் உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.

ஜிப்ரிக்கோ அவர்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தினருக்கும் தேவையான சட்ட உதவிகளை வழங்குவதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம் என்றார்.

#SrilankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
images 3 1
உலகம்செய்திகள்

ஜெர்மனியில் அதிர்ச்சி: மருத்துவமனையில் பணிச்சுமை காரணமாக 10 நோயாளிகளைக் கொலை செய்த ஆண் தாதிக்கு ஆயுள் தண்டனை!

ஜெர்மனியில் உள்ள ஊர்செலன் (Ürselen) நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில், 2020ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த...

images 4 1
செய்திகள்இந்தியா

தமிழ்நாடு இலங்கைத் தமிழர்களுக்கு உடனடியாக வாக்களிக்கும் உரிமை மற்றும் குடியுரிமை வழங்கு: மத்திய அரசுக்கு எஸ். ராமதாஸ் வலியுறுத்தல்!

தமிழ்நாட்டில் பல தசாப்தங்களாக வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழ் ஏதிலிகளுக்கு (Refugees) வாக்களிக்கும் உரிமை மற்றும்...

MG 8826
இலங்கை

கிளிநொச்சியில் மாவீரர் துயிலும் இல்லக் காணிகளை இராணுவம் விட்டு வெளியேற ஜனாதிபதி உத்தரவு – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்!

இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள மாவீரர் துயிலும் இல்லக் காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அநுர...

25 6909cc0a3b1bf
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சங்குப்பிட்டி கொலை: பிரதான சந்தேகநபர் தவில் வித்துவான் அல்ல – இசை வேளாளர் இளைஞர் பேரவை விளக்கம்!

பூநகரி – சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்துடன் கைது செய்யப்பட்ட பிரதான...